எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் 5 மத்திய அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது.
இங்குள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி மட்டுமின்றி, பாஜக ஹிந்துத்துவ அடையாளமாக முன்னிறுத்தப்படும் அயோத்தியும் அடங்கும். இந்த 5-வது கட்ட தேர்தல் பூர்வாஞ்சலின் 27 தொகுதிகளிலும், பந்தேல்கண்டின் நான்கு தொகுதிகளிலும் நடைபெறும் ஆறாவது மற்றும் ஏழாவது கட்ட தேர்தல்களை முடிவுசெய்யும் வகையில் இருக்கிறது. இது பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும்.
2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 14 இடங்களில் 13-ல் வெற்றி பெற்றது. காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்த நிலையில் காங்கிரஸிடம் இருந்து அமேதியை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், சோனியா காந்தி 2019-ல் ரேபரேலியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டார். 2019 மற்றும் 2014 ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், கூட்டணி கட்சியான சமாஜ்வாடி மீதமுள்ள 12 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்தாவது கட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ரேபரேலியில் ராகுல் காந்திக்கும், பாஜக எம்எல்சியும், யோகி ஆதித்யநாத்தின் அமைச்சருமான தினேஷ் பிரதாப் சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் பிரதாப் சிங் 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் பிற பிற்படுத்தப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், 40 ஆண்டுகளாக காங்கிரஸ் குடும்பத்தின் பிரதிநிதியான உள்ள கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி நன்ஹே சிங் சௌகானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ஹிந்துத்துவ பலத்தை சோதிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இருப்பினும், பைசாபாத் பாஜகவின் கோட்டையாக இருந்ததில்லை. 2009-ல் காங்கிரஸும், 2004ல் பகுஜன் சமாஜ் கட்சியும், 1998ல் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றன. 1991, 1996, 2014 மற்றும் 2019ல் பாஜக வெற்றி பெற்றது. 2019-ல், ஐந்து முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் இருந்த பாஜகவின் லல்லு சிங்,சமாஜ்வாடியின் ஆனந்த் சென்னை தோற்கடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த முறை சமாஜ்வாடி 9 முறை எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் சேனாவையும், பகுஜன் சமாஜ்வாடி சச்சிதானந்த பாண்டேவையும் ஆகியோரை களமிறங்கியுள்ளதால் பலமுனை போட்டிநிலவுகிறது.
1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை மக்களவையில் லக்னௌவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் எம்பி ராஜ்நாத் சிங் மூன்றாவது முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது பாஜகவின் உண்மையான சவாலாக இருக்கிறது. பாஜகவின் கோட்டையான லக்னௌவில் 1991க்கு பின் அக்கட்சி தோற்றதேயில்லை.2014, 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே வெற்றி பெற்றிருந்தார். லக்னௌவை ஒட்டியுள்ள இந்த இரண்டு தனித் தொகுதிகளின் வெற்றிகள் பாசி சமூகத்தினரின் கைகளில் உள்ளன.
பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கௌஷல் கிஷோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு சவாலாக சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சௌத்ரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் குமாரும் உள்ளனர். க்னௌவை ஒட்டிய இந்த தொகுதி ஒவ்வொரு முறையும் வெற்றியாளர்களை மாற்றியுள்ளது. இருப்பினும், பாஜக 2014 இல் வெற்றி பெற்று 2019-யிலும் தக்கவைத்துக் கொண்டது. தலித்துகள் மத்தியில் பாசி சமூகத்தினரும், ஓபிசிகளில் குர்மி சமூக வாக்காளர்களும் தொகுதியில் முக்கியமானவர்கள். 20% க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த முறை பாஜக அதன் எம்பி உபேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக ராஜ்ராணி ராவத்தை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரான பி.எல். புனியாவின் மகன் தனுஜ் புனியாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கீர்த்தி வர்தன் சிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியஸ்தர் பேணி பிரசாத் வர்மாவின் பேத்தி ஸ்ரேயா வர்மாவும், பகுஜன் சமாஜின் சௌவுரப் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். 2019 இல் சமாஜ்வாடி- பகுஜன் கட்சி கூட்டணி வேட்பாளரான சுக் லால் வர்மாவை தோற்கடித்த சாத்வி நிரஞ்சன் ஜோதியயே பாஜக மீண்டும் நிறுத்தியுள்ளது. குர்மி சமூகத்தினர் அதிகம் வாழும் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி அதன் மாநிலத் தலைவரான நரேஷ் உத்தமை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் சார்பில் மணீஷ் சச்சன் போட்டியிடுகிறார்.
பிரஜ்பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் பகத்ரம் மிஸ்ராவையும், பகுஜன் சமாஜ் கட்சி பிராமணரான நரேந்திர பாண்டேவை களமிறக்கி போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. தனித்தொகுதியான கோசாம்பியில் பாஜக எம்பி வினோத் சோங்கருக்கும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இந்திரஜித் சரோஜின் மகனும், வயதில் மிகவும் இளையவரான புஷ்பேந்திர சரோஜுக்கும் இடையே சுவாரசியமான போட்டி நிலவுகிறது. இங்கே, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர் மற்றும் பண்டா உள்ளிட்ட நான்கு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
தமிழ்நாட்டில் ஒரு வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
04 Feb 2025சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
04 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையானது.
-
அரசு காலி பணியிடங்கள் எத்தனை? - டி.என்.பி.எஸ்.சி தலைவர் விளக்கம்
04 Feb 2025சென்னை : இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-02-2025.
04 Feb 2025 -
அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்
04 Feb 2025சென்னை : சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
-
மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத விவகாரம்: 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்
04 Feb 2025புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் சாசனப்படி 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க
-
பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
04 Feb 2025சென்னை : பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டபேரவை கூடுகிறது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலைஅறிக்கையை தாக்கல் செய்கிறார்.
-
திருப்பரங்குன்றத்திற்கு பழனியில் இருந்து காவடியுடன் புறப்பட்ட பா.ஜ.வினர் கைது
04 Feb 2025திண்டுக்கல் : பழனியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரவுடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
04 Feb 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்து
-
தி.மு.க. - நா.த.க. இடையே நேரடிப்போட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Feb 2025ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
-
11-ம் தேதி ராமேசுவரம் வருகிறார் பிரதமர் மோடி
04 Feb 2025சென்னை: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
கால்நடைகளை கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐகோர்ட்
04 Feb 2025சென்னை: கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்
04 Feb 2025ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 மதுக் கடைகள் மூடப்பட்டன.
-
வரும் 16, 25-ல் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
04 Feb 2025சென்னை : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.
-
அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் கேட்ட சிறுவனுக்கு அமைச்சர் பதில்
04 Feb 2025திருவனந்தபுரம் : கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்
-
தமிழகத்தில் காலநிலை விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2025சென்னை: காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துப் ப
-
உ.பி. மகா கும்பமேளாவில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
04 Feb 2025புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
-
ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுகிறார்: ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 Feb 2025புதுடில்லி : தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து
04 Feb 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
-
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் கைது
04 Feb 2025திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
-
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடக்கம்
04 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
-
தேர்தல் விதிமுறை மீறல்: டெல்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு
04 Feb 2025புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
-
சங்கத்தமிழ் நாள்காட்டி, கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப்பக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
04 Feb 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.
-
தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் வரும் 12-ம் தேதி கோவில் நடை சாத்தப்படும்
04 Feb 2025ராமேசுவரம் : தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 12 அன்று நடை சாத்தப்படுகிறது.
-
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்
04 Feb 2025திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி திருவிழாவில் பக்தர்கள் வாகன சேவைகளை தரிசனம் செய்தனர்.