எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி, ஜூலை. 20 - தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட திமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஒரு கோஷ்டியாகவும், மற்றொரு முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் இன்னொரு கோஷ்டியாகவும், செயல்பட்டு வருகிறார்கள். இதனால் திருச்சி மாவட்ட திமுகவில் இரு கோஷ்டிகளும் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே வரும் 22ந்தேதியுடன் விண்ணப்பங்கள் வழங்கும் பணி முடிவடைய இருப்பதால் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சியை அடுத்த வயலூரில் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. ஒரு திருமண மண்டபத்தில் கே.என்.நேரு கோஷ்டியினர் விண்ணப்பங்களை நேற்று காலை வழங்கினார்கள். மற்றொரு திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் கோஷ்டியினர் விண்ணப்பங்களை திமுகவினரிடம் வழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருதிருமண மண்டபத்திலும் திமுகவினர் குவிந்திருந்தனர். ஒரு மண்டபத்திற்கு நேற்று காலை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்று விண்ணப்பங்களை வழங்கி விட்டு மற்றொரு மண்டபத்திற்கு செல்ல ஆயத்தமானார். இதையடுத்து கே.என்.நேருவின் கார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு இருசக்கர வாகனம் மீது லேசாக உரசியது. அதில் வந்தவர் கே.என்.நேருவை பார்த்து ஆத்திரத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் நேருவின் அடியாள் ஒருவர் மொபட் ஓட்டிவந்தவர் மீது கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவரது சட்டையும் கிழிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கே.என்.நேரு வந்த கார் மீது இன்னொரு கோஷ்டியை சேர்ந்த திமுகவினர் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதனால் நேருவின் கார் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து இரு கோஷ்டியினரும் மாரிமாரி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சில திமுகவினருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி பெரும் கலவரப்பகுதியாக காட்சியளித்தது. பிறகு கே.என்.நேரு இன்னொரு மண்டபத்திற்கு சென்று விண்ணப்ப படிவங்களை கொடுத்து விட்டு சென்று விட்டார்.
கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் நகரில் நடந்த திமுக நிகழ்ச்சிகளில் இரு கோஷ்டியினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மற்றொரு முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் ஏறாமல் நேருவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓரமாக நின்று போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஆகமொத்தம் திருச்சி மாவட்ட திமுகவில் கோஷ்டி சல் நீருத்த நெருப்பாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது: தமிழ்நாடு அரசு விளக்கம்
27 Mar 2025சென்னை, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கதேச தேசிய தினம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
27 Mar 2025புதுடெல்லி, இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்க
-
உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
27 Mar 2025சென்னை, உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
27 Mar 2025திருநெல்வேலி, அ.தி.மு.க.
-
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
27 Mar 2025நெல்லை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
-
ஜம்மு-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
27 Mar 2025ஸ்ரீநகர், காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
-
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
27 Mar 2025புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
27 Mar 2025ப்ளோரிடா: அமெரிக்காவின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
-
உதகையில் புலி தாக்கி இளைஞர் பலி
27 Mar 2025உதகை, உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஆம்ஸ்ட்ராங் நினைவு நடைபயணம்: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2025சென்னை, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உய
-
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளா
-
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 6 பேர் பலி
27 Mar 2025காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
-
இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
27 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
27 Mar 2025சென்னை: ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
-
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் - இளைஞர் கைது
27 Mar 2025நெல்லை, நெல்லையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டதால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
பகுதி நேர ரேசன் கடைகள்: சட்டசபைில் அமைச்சர் தகவல்
27 Mar 2025சென்னை, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் இ .பி.எஸ்.க்கு மரியாதை: ஓ.பன்னீர்செல்வம்
27 Mar 2025சென்னை, அ.தி.மு.க.
-
வல்லபாய் படேலின் மறு உருவம்: அமித்ஷாவிற்கு ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
27 Mar 2025மதுரை: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க.
-
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்
27 Mar 2025ஐதராபாத், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் தகவல்
27 Mar 2025புதுடெல்லி, தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மல
-
தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதால் பரபரப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்
-
வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
27 Mar 2025சென்னை: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகல்
27 Mar 2025வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் விலகியுள்ளார்.
-
இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நடவடிக்கை: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
27 Mar 2025சென்னை, “இரண்டாம் நிலை நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
-
கோவையில் மூதாட்டி கூட்டு பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
27 Mar 2025கோவை, கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.