முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பீர் சிறந்ததாம்

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.

நிலக்கடலை பட்டரில் இருந்து வைரம் தயாரிக்கலாம் தெரியுமா?

பூமியின் கீழ் மட்டத்தில் உள்ள அழுத்தம் குறித்த மாதிரிகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதித்தனர். அப்போது பூமியின் கீழே 2,900 கிமீ ஆழத்தில் வளிமண்டலத்தை காட்டிலும் 1.3 மில்லியன் மடங்கு அதிக அழுத்தம் உருவாக்க முடியும் என கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி இதன் மூலம் வைரங்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளும் தெரிய வந்தன. அறிவியல் கோட்பாட்டின்படி அதிகமான அழுத்தத்தில் கார்பன் அணுக்கள் வைரங்களாகின்றன. இந்த சோதனையின் போது நிலக்கடலை பட்டர் (வெண்ணெய்யை) பரிசோதித்த போது அதிலிருந்தும் வைரம் தயாரிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

பாம்புக்கு உதவி

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ என்பவர், சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க உதவியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடாதபடி, அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்து அது கடந்து செல்லும் வரை இவ்வாறு 5 நிமிடங்கள் இருந்துள்ளார்.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்

இந்தியாவில் பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக ஜம்முவில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலம் தண்ணீருக்கு 1,178 அடி உயரத்தில் உள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலம் ஆகும். இது உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும், பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 30 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

வங்கி கணக்கை பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கியதிலிருந்தே எந்தவித பண பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கிறீர்களா? அப்போ இந்த தகவல் கண்டிப்பா உங்களுக்கு தான் பயன்படும்.  பொதுவாக எந்த வங்கியில் நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கினாலும் அதில் 1 வருட காலம் வரை நீங்கள் வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் உங்களது சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும். அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இதே போல் வங்கியில் பண பரிவர்த்தனை எதுவும் செய்திடாத நிலையில் உங்களது வங்கி கணக்கு "DORMANT(செயலற்ற நிலை)" நிலைக்கு சென்றுவிடும்.  வங்கி கணக்கு நம்முடைய தேவைக்கு தானே, அதில் ஏன் இத்தகைய செயல்முறை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இது தான் அனைத்து வங்கிகளிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் விதிமுறை ஆகும். இதனால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை.  இதனால் உங்கள் CIBIL ஸ்கோர் ஒருபோதும் பாதிக்கப்படாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago