எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - எழும்பூர் வக்கீல்கள் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஸ்டாலின் என்ற வக்கீல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வக்கீல்கள் சந்தன்பாபு, மைக்கேல் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 20 வாக்குகள் வித்தியாசத்தில் சந்தன்பாபுவிடம் மைக்கேல் தோல்வியை தழுவினார். வெற்றி பெற்ற சந்தன்பாபு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் கோர்ட்டு வளாகத்திலேயே அவர்கள் வெற்றி ஊர்வலத்தை நடத்தினர்.
அப்போது திடீரென மோதல் வெடித்தது. சந்தன்பாபு ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் நள்ளிரவில் எழும்பூர் கோர்ட்டு போர்க்களம் போல காட்சி அளித்தது. இதையடுத்து வக்கீல்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஆனால் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் சந்தன்பாபு ஆதரவாளர்களை விரட்டி விரட்டி தாக்கியது.
இந்த தாக்குதலில் சந்தன் பாபுவின் ஆதரவாளரான வக்கீல் ஸ்டாலினின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மின்னல் வேகத்தில் வந்த கல் ஒன்று ஸ்டாலினின் பின் தலையை பலமாக தாக்கியது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கீழே சாய்ந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
சக வக்கீல்கள் அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஸ்டாலினின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வக்கீல் குட்டியப்பன் எழும்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் மைக்கேல் மற்றும் அவரது ஆதரவாளர்களான லோகேஸ்வரி, ராஜேஷ், நடராஜ், நரேஷ், சார்லஸ், முனியாண்டி மற்றும் 30 பேர் சேர்த்து தாக்கியதில்தான் ஸ்டாலின் உயிரிழந்தார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஆபாஷ் குமார், இணை கமிஷனர் ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி துணை கமிஷனர் கிரி, எழும்பூர் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மதியரசு ஆகியோர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இதை தொடர்ந்து பெண் வக்கீல் லோகேஸ்வரி மற்றும் ரவுடி முனியாண்டி ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வக்கீல்கள் ராஜேஷ், சார்லஸ் ஆகிய இருவரும் கோயம்பேட்டில் நேற்று கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கொலை வழக்கில் வக்கீல் மைக்கேல் உள்ளிட்ட மேலும் 33 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இவர்களை பிடிக்க தனிப்படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தப்பி ஓடிய அனைவரும் கோர்ட்டில் சரண் அடையும் முன்னரே கைது செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் குற்றவாளிகள் அனைவரையும் பிடிப்போம் என்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டு வழக்கம் போல செயல்படும். அப்போது மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கொலையுண்ட ஸ்டாலினுக்கு இன்று இரங்கல் கூட்டமும் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 20 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்18 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 17 hours ago |
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.