எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு நடத்திய போட்டியில் 171 பேருக்கு பரிசுகள்: கே.சி வீரமணி வழங்கி பாராட்டு
சென்னை, சென்னையில் தமிழக அரசின் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விழாவில் சிறப்பு நூலாசிரியர்கள், பதிப்பகத்தார், மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் என 171 பேருக்கு ரூ 28 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு சார்பாகச் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா, சென்னைப் பல்கலைக் கழகக் கூட்ட அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் . கே.சி. வீரமணி பங்கேற்று, திருக்குறள் முற்றோதல் செய்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 மாணவர்களுக்கு ரூ.10,ஆயிரம் - பரிசுக்கான காசோலைகள் வழங்கியும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கியும், தமிழில் 36 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தார்கள் என மொத்தம் ரூ.28,லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள பணப் பரிசுகளை 171 பேருக்கு வழங்கியும் விழாச் சிறப்புரையாற்றினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது மக்கள் நலன் கருதி நல்ல பலத் திட்டங்களை நாள்தோறும் அறிவித்தும் செயற்படுத்தியும் வரும் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைகள், அறநெறிக் கருத்துக்கள், எங்களை வழிநடத்திச் செல்லும் எங்களின் ஆதாரங்களாகும்.
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பெற்ற அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டார் மக்களின் முதல்வர் அம்மா. அவரது சிறப்புமிக்க சிந்தனையில் சிறந்தோங்கிய இந்த சித்திரைப் புத்தாண்டு விழா பழந்தமிழ்ப்பெருமையை போற்றச் செய்கிறது எனலாம்.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு என்ற வள்ளுவனின் சிந்தனையை தனது மேலோங்கிய செயல்பாட்டால் செயல்படுத்தி வருகிறார் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா .
பேரறிஞர் அண்ணாவும் எம்.ஜி.ஆரும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்கள். உலகத் தமிழறிஞர்கள் போற்றுகின்ற அளவில் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தி இயல், இசை, நாடகம் என்று முத்தமிழோடு அறிவியல் தமிழையும் கொண்டு வந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்ததோடு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் புத்துயிர் ஊட்டி பெருமை சேர்த்தவர் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா.
உலகத்தின் எந்த மூலையிலும் தமிழர்கள் இன்னல்பட்டாலும் முதல் குரல் கொடுத்தவர், கொடுப்பவர் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா, .அன்றைய ஆட்சியாளர்கள் தமிழைச் செம்மொழி என்ற பெயரிட்டு ஒட்டு மொத்தமாக குடும்பத்தோடு கோவையிலே கும்மாளம் அடித்ததை எக்காலமும் தமிழறிஞர்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுத்தவர் அன்றைய முதலமைச்சர். அதைப் பெற்றுத் தந்தவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா . அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழ் ஓங்கி வளர்ந்திட நாம் அனைவரும் உழைத்திட இந்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறினார்.
முன்னதாக, வரவேற்புரையாற்றிய தமிழ் வளர்ச்சி- செய்தித்துறைச் செயலாளர் மூ.இராசாராம் பேசுகையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் சித்திரையில் கொண்டாடப்படுவது திராவிடப் பண்பாடு ஆகும். அதனால்தான், தமிழர்கள் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட, சில தினங்கள் முன்போ பின்போ ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தவர் """"யுகாதி"" என்றும் """"விஷு"" என்றும் புத்தாண்டைக் கொண்டாடி வரவேற்கிறார்கள். இதைப் போலவே, பிகார், ஜார்க்கண்ட், காஷ்மீர், மகாராஷ்டிரம், கோவா, வங்காளம், அசாம், பஞ்சாப், ஹரியானா, மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சித்திரை மாதத்தை ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் இந்தப் பருவத்தில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உத்தம சோழரின் செப்பேடுகளும், முதலாம் குலோத்துங்கரின் கல்வெட்டுகளும் சோழநாட்டின் கோயில்களில் சித்திரைத் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை அறியத் துணைபுரிகின்றன. அந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ்மொழி கிரேக்கத்தைவிடப் பண்பட்டது. இலத்தீனைவிட அழகானது. ஆங்கிலத்தைவிட ஆற்றல் வாய்ந்தது. இத்தாலிய மொழியைவிட இனிமையானது. எபிரேயத்தைவிடப் பழமையானது என்றெல்லாம் பிற நாட்டு மொழி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
விழாவில், முன்னாள் அரசவைக் கவிஞர் . முத்துலிங்கம் தலைமையில் ‘தாயே தமிழே’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கில் கவிஞர் சினேகன், கவிஞர் கவிதாசன், கவிஞர் தங்க காமராசு, கவிஞர் பா.கிருஷ்ணன், கவிஞர் மலர்விழி, கவிஞர் சி. ரேகா மற்றும் செல்வன் கோ. மணிகண்டன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
அதனைத் தொடர்ந்து கலைமாமணி கு. ஞானசம்பந்தன் தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா? தமிழக வளர்ச்சியா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்தில் தமிழ் வளர்ச்சியே என்ற தலைப்பில் கவிஞர் தங்க மூர்த்தி, பேராசிரியர் அர்ச்சனா கார்த்திகேயன், கவிஞர் மலர்விழி ஆகியோரும் தமிழக வளர்ச்சியே என்ற தலைப்பில் கவிஞர் கோவேந்தன், பேராசிரியர் விசயசுந்தரி, பேராசிரியர் விமலா அண்ணாதுரை ஆகியோரும் பேசினார்கள்.விழாவின் நிறைவாக, தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு. சேகர் நன்றி கூற நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 14 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்18 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 17 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
18 May 2024சென்னை : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.