முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கத்தால் பீகாரில் மட்டும் 38 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: நிலநடுக்கத்தால் பீகாரில் 38 பேர் பலியாகி உள்ளனர்.  நேபாளத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி, பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பீகாரில் 38 பேர் பலியாகியுள்ளனர், 133 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். 69 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் நிலநடுக்கத்தால் பீகாரில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நேபாளில் நேற்று மதியம் 12.39 மணி அளவில் ஆப்டர்ஷாக் என்னும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இதையடுத்து டெல்லி, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும் நேற்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து