எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 75 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் 599 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பாலங்களையும், 2 ரயில்வே மேம்பாலங்களையும், 2 சாலைப் பணிகளையும், 7 கட்டிடங்களையும் திறந்து வைத்து, 1002 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள், மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிகமுக்கிய பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், போன்ற பணிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 75 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 792 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இப்புதிய பாலம் திறக்கப்படுவதால் நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், சென்னை போன்ற பகுதிகளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். பாலாற்றின் குறுக்கே புதிய பாலம்
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - கிழக்கு கடற்கரை சாலையில், வாயலூர் அருகில் (கி.மீ. 76/0) 105 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், கடுகனூரில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; சேலம் மாவட்டம் - எடப்பாடியில் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பாப்பம்பாடியில் 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், கவர்பனையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுவேதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஓமலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கருங்கல்லூரில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சேலம் கேம்பில் 23 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேட்டூர் எல்லீஸ் உபரிநீர் போக்கின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; ஈரோடு மாவட்டம் - அண்ணாநகரில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், எல்.பி.பி.கால்வாய் மில்மேடில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எல்.பி.பி. கால்வாய் பெரியார் நகரில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; தருமபுரி மாவட்டம், பேதாதம்பட்டியில் காட்டாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே 43 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; கரூர் மாவட்டம் - எழுநூத்தி மங்கலத்தில்,நொய்யல் ஆற்றின் குறுக்கே 2 கோடியோ 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஓடத்துறையில் 44 கோடியில் ரயில்வே மேம்பாலம்
61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் நச்சலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் - தோளம்பாளையத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சொக்கனூரில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணுகுசாலையுடன் கூடிய பாலம் மற்றும் இரத்தினபுரியில் 19 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 11-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஓடத்துறையில் 44 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண் 248 -க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்; திருப்பூர் மாவட்டம், செங்காட்டு சாலையில் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் அணுகு சாலை; தஞ்சாவூர் மாவட்டம் - ஒக்கநாட்டில் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தென்னமநாட்டில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருவாரூர் மாவட்டம் – சோளக் குறிச்சியில் நாட்டாற்றின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணைப்பு பாலம், பேரையூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், விளத்தூரில் மல்லியனாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் செட்டிசத்திரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாகப்பட்டினம் மாவட்டம் - சந்திரப்பாடியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ஓதவந்தான்குடியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தேனி மாவட்டம் - அம்மச்சியாபுரத்தில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் முதலக்கம்பட்டி – வைகை ஆற்றின் குறுக்கே 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
தாமிரபரணி குறுக்கே 19 கோடியில் பாலம்
திருநெல்வேலி மாவட்டம் - சித்தூரில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், பழைய குற்றாலத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், குறுங்காவனத்தில்3 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தெற்கு மலையடிப்பட்டில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தூத்துக்குடி மாவட்டம் - ஊத்துப்பட்டியில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஓசனூத்துவில் 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், டி.சுப்பையாபுரத்தில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 19 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
எண்ணூர் துறைமுக இணைப்புசாலை
விருதுநகர் மாவட்டம், சுத்தமடத்தில் 1 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; சிவகங்கை மாவட்டம் - பாவாகுடியில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் சில்லாம்பட்டியில் விருசுழி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; இராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 7 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருவள்ளூர் மாவட்டத்தில் 188 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை; நாமக்கல் மாவட்டம் - ராசிபுரத்தில் 23 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராசிபுரம் புறவழிச்சாலை;
சைதாப்பேட்டையில் பொறியாளர் அலுவலகம்
சென்னை – சைதாப்பேட்டையில் 38 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகக் கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டம் - செங்கிப்பட்டியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஒரத்தநாட்டில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகைகள்; தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம்; விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம்; சேலம் மாவட்டம், தலைவாசலில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளள பயணியர் மாளிகை; என மொத்தம் 675 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 பாலங்களையும், 2 ரயில்வே மேம்பாலங்களையும், 2 சாலைப் பணிகளையும், அலுவலகக்கட்டடங்கள் மற்றும் பயணியர் மாளிகைகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
வேளச்சேரியில் 108 கோடி மேம்பாலம்
மேலும், சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் நகர்புற பேருந்து நுழைவுவாயில் - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் 93 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டிலான மேம்பாலம்; சென்னை, வேளச்சேரி விஜயநகர பேருந்து நிலையம் அருகில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலம்; காஞ்சிபுரம் மாவட்டம், மேடவாக்கத்தில் 146 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலம்; சேலம் மாவட்டம் – சேலம் மாநகரில் ஐந்து சாலைகள் சந்திப்பில் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு அடுக்குசாலை மேம்பாலம்; விழுப்புரம் மாவட்டம், ஆறுத்தாங்குடி ஓடையின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; திருவாரூர் மாவட்டம், தட்டாங்கோவிலில் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; கடலூர் மாவட்டம் - மேலூரில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம், நடராஜபுரத்தில் உப்பனாற்றின் குறுக்கே 10 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்;
கொடைக்கானலில் சாலை மறுக்கட்டமைப்பு
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 15 -க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; வேலூர் மாவட்டம் - வேலூர் மாநகரத்தில் 36 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 126 மற்றும் 127-க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; கண்ணடிக் குப்பத்தில் 25 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 78 -க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் - பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் 30 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 7-க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; திண்டுக்கல்லில் 59 கோடியே 80 லட்சம்ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 2, 27 மற்றும் 308-க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; தஞ்சாவூர் மாநகரில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்டபுற வழிச்சாலை; சேலம் மாவட்டம் - எடப்பாடியில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட புறவழிச்சாலை; தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 51 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சாலை மறுகட்டமைக்கும் பணி; என மொத்தம் 1002 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 பாலங்கள், 5 ரயில்வே மேம்பாலங்கள், 4 மேம்பாலங்கள், 4 சாலை பணிகள் ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்ஷீலா பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் கோ.அர.இராசேந்திரன் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்1 day 12 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 17 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
கூட்டணி கட்சிகளுக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் நெருக்கடியால் குழப்பம்
06 Jun 2024புதுடெல்லி:கூட்டணி கட்சிகளுகக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Jun 2024சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
பா.ஜ., எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார்
06 Jun 2024புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜ.க, எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்கும் நரேந்திரமோடி ஆட்சி அமை
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
ஆந்திர முதல்வராக ஜூன் 12-ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
06 Jun 2024ஐதராபாத்: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வருகின்ற 12-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கு
-
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம்?
06 Jun 2024சென்னை: தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
-
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர் குழு சந்திப்பு புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்
06 Jun 2024புதுடெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணையர் குழு நேற்று சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.
-
சீனா விசா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம்: தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு
06 Jun 2024சென்னை, ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.