முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நடைபெற்றது.

 

முதியோர் உதவி தொகை

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 256 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் , இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து திருமானூர் சமுதாய நல மையத்திற்கு புற நோயாளிகள் அமர்வதற்கு ஏதுவாக புதிதாக நாற்காலிகள் வாங்குவதற்கு ரூ.58,015-க்கான காசோலையினை திருமானூர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கநாதன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் தி;ட்டம்) மங்கலம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்