எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 353 மாணவியர்களுக்கும், பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 251 மாணவியர்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 43 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 1158 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி விழாப்பேருரையாற்றினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த தொலைநோக்குத் திட்டமான, பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கிய மிகவும் அற்புதமான திட்டமாகும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், பெண் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காகவும், பள்ளியில் பயிலும் பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வந்தனர்.
2006-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களை சந்தித்து, எங்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அம்மா அவர்களிடம் சமர்ப்பித்து, உடனடியாக அமைச்சரவையை கூட்டி, மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க ஆணையிட்டார்கள். மேலும், பள்ளிக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் அற்புதமான திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, தொடர்ந்து 5 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டும், மீண்டும் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்கள்.
எல்லா துறைகளுக்கும் எடுத்துக்காட்டாக பள்ளி கல்வித்துறையை முன்னுதாரணமாக வைத்து, கல்வித்துறைக்கென நிதியாண்டில் அதிகமான நிதியை ஒதுக்கி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா கல்வி உபகரணங்கள் (வரைகலைப்பெட்டி, சீருடைகள், காலனிகள், சேனிட்டரிநாப்கின்கள், வரைபடம்) போன்றவை தொடர்ந்து பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஓராண்டுகூட இத்திட்டம் நீடிக்கவில்லை. உடனடியாக அம்மாநில முதலமைச்சர் இத்திட்டம் என்னால் நிறைவேற்ற முடியாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா தொடர்ந்து 6-வது ஆண்டாக இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில்கூட இத்திட்டம் இல்லை. ஆனால், தமிழகத்தில் மாணவ மாணவியர்களை கல்வியில் மேம்பாடு அடைவதற்காக இத்திட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 36 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,25,578 மாணவர்களுக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டிலும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 1,30,939 மாணவ மாணவியர்களுக்கு ரூ.48 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 12,468 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு தனியே கழிவறை கட்டப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்த அனைத்துத் திட்டங்களும் தொலைநோக்குத் திட்டங்களாகும் என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 2015-16ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்ற பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசு வழங்கினார்.
இவ்விழாவில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
சென்னையில் நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
06 May 2024சென்னை : சென்னையில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் த
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
'நீட் தேர்வு' வினாத்தாள் கசிவா? - தேசிய தேர்வு முகமை விளக்கம்
06 May 2024சென்னை : ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
06 May 2024டெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.வும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு ஜாமீன் மற
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு
06 May 2024டெல்லி : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மர்மமாக உயிரிழந்த காங். தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: நெல்லை போலீசார் தீவிர விசாரணை
06 May 2024நெல்லை : மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024