முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய வாகனத்தினை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், நேற்று (07.02.2017) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

குழந்தை திருமணம்

 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததவாது :-

அரியலூர் மாவட்டம் சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை மற்றும் நிறுவனத்துடன் இணைந்து குழந்தை திருணம் நடைபெறுவதை தடுப்பது தொடர்பான விளம்பர ஊர்தி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமானூர், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பேருந்துநிலையம் பொது இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, திட்ட அலுவலர் வேலம்மாள் மற்றும் கலைக்குழுவினர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்