முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி ஐயப்ப கோயிலில் மண்டலா பூஜை நிறைவு விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

தி.மலை மாவட்டம் வாணாபுரம் அருகே க.உண்ணாமலை பளையத்தில் அமைத்துள்ள ஆதி ஐயப்பன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜையின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. கடந்த ஜனவரி முதல் தேதியன்று ஆதி ஐயப்பன் கோயிலில் 27 ராசியை குறிக்கும் வண்ணம் 27 அடி உயரமுள்ள ஐயப்பசிலை நிறுவி அதன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மண்டல பூஜைகளும் நடந்து வந்துள்ளது. இதன நிறைவு விழா நேற்று முன்தினம் ஆதி ஐயப்பன் கோயிலில் நடந்தது. இதனை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை,கணபதி ஹோமம், லஷ்மி பூஜை, பூர்ணாஹ§தி மற்றும் மகாதீபாராதனை நடந்தது. பினனர் யாகசாலையில் வைத்து பூறை செய்யப்பட்ட புனித கலச நீரை மேளதாளத்துடன் ஸ்ரீஹரிபுத்ர சுவாமிகள் ஐயப்ப சுவாமி உள்ளிட்ட சன்னதிகளுக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகளும் செய்தார். இந்நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்