முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.=மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையாளர் திரு.ப.மணிவண்ணன் அவர்கள் தலைமையில்   நடைபெற்றது.
 மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் காலை  10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 மனுக்கள் பொது மக்களிடமிருந்து துணை ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்;. சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 அடுத்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 11.07.2017 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெறும்.
  இந்த குறைதீர்க்கும் முகாமில் நகரமைப்பு அலுவலர் திரு.ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திரு.முருகேச பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், உதவி பொறியாளர் (தெருவிளக்கு) திரு.செந்தில், உதவி பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து