எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. செய்தியாளர்கள் பயணத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுப்பணித்துறையின் சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- மக்கள் வாழ்வில் வளம்பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால் மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்ற அடிப்படை கொள்கையினை பின்பற்றி எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடிய வகையில் அனைத்துத் துறைகளின் சார்பில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவின் மூலமாக தமிழக அரசு, குறிப்பாக மாணவ மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கூடங்களில் புதிய கட்டடங்கள், பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் அரசு அலுவலகங்களுக்கு புதுமைத் திட்டங்களை செயல்படுத்திட புதிய கட்டடங்கள், மழை வெள்ளக் காலங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின் கீழ் புயல் பாதுகாப்பு மையங்கள், மனித உயிரினம் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் மருத்துவமனைக் கட்டடங்கள் என காலங்கள் போற்றும் கட்டுமானப் பணிகளை உருவாக்கி வருகிறது. இந்த கட்டடங்கள் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கும், தமிழகத்தின் கட்டடக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு ரூ.13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் அதிக காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடப் பணிகள் மற்றும் நவீன கழிப்பறை கட்டடங்களும், ரூ.4 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில்; நவீன வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய மாணவ மாணவியருக்கான விடுதி கட்டடங்களும், ரூ.11 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டடம், ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் அரசு விருந்தினர் மாளிகையும், ரூ.6 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பணியாளர்கள் சிரமமின்றி பணி மேற்கொள்ளும் வகையில் பொது மக்கள் வந்து செல்லும் பல்வேறு அரசு கட்டடங்களும், ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட கால்நடை மருந்தக கட்டிடங்களும், ரூ.7 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் திருவாடானை மற்றும் முதுகுளத்தூரில் நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்பு கட்டடங்கள் என ரூ.51 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் ரூ.57 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் 30 பள்ளிகளில் அதிக காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடப் பணிகளும், ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 4 கால்நடை மருந்தக கட்டிடங்களும், கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின்கீழ் ரூ.62 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டடங்களும், ரூ.29 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் யாத்ரிகர்கள் தங்கும் விடுதி கட்டடமும், ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசுத் துறைக்கான 7 அலுவலக கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய மாணவ மாணவியருக்கான 3 விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கும், புதிதாக உருவாக்கப்பட்ட கீழக்கரை வருவாய் வட்டத்திற்கு ரூ.2 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்திடும் நோக்கத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் காலங்கள் போற்றும் வகையில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கட்டுமானப் பணிகள் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். செய்தியாளர் பயணத்தில் ராமநாதபுரத்தில் ரூ.58 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி பயன்பாட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை உறை விந்து வங்கி கட்டிடத்தினையும், திருப்பாலைக்குடியில் கட்டப்பட்டு வருகின்ற ரூ.2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தினையும், பழனிவலசையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ்; ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தினையும், இரணியன்வலசையில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற சமுதாய கூட வடிவமைப்பு கொண்ட பல்நோக்கு புகலிடக் கட்டிடத்தினையும் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் காண்பித்து, திட்டப் பணிகளை விளக்கி கூறினார். செய்தியாளர்கள் பயணத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட செயற்பொறியாளர் அ.தினகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், உதவி பொறியாளர்கள் ஆர்.பாண்டியராஜன், வி.அருண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்1 day 12 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 17 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
கூட்டணி கட்சிகளுக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் நெருக்கடியால் குழப்பம்
06 Jun 2024புதுடெல்லி:கூட்டணி கட்சிகளுகக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Jun 2024சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ., எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார்
06 Jun 2024புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜ.க, எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்கும் நரேந்திரமோடி ஆட்சி அமை
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
ஆந்திர முதல்வராக ஜூன் 12-ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
06 Jun 2024ஐதராபாத்: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வருகின்ற 12-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கு
-
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர் குழு சந்திப்பு புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்
06 Jun 2024புதுடெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணையர் குழு நேற்று சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
சீனா விசா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம்: தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு
06 Jun 2024சென்னை, ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம்?
06 Jun 2024சென்னை: தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.