எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ கூட்டாக தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலர் தயாரிப்புக்குழுவின் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசைப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய இந்த விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்டந்தோறும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் பலமுறை சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வரும் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் நிறைவு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உறுதியாக பங்கேற்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, சகலை போன்றவர்கள் மீது பல வழக்குகள் இருக்கிறதென்றும், அதன் காரணமாக சிறையில் சசிகலாவை சந்திக்க பயந்ததாக தினகரன் கூறியிருக்கிறார். இது தவறான இட்டுக்கட்டிய கற்பனையாகும். எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி கர்நாடகத்தில் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். கர்நாடகத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள பணிகளை மேற்கொண்டு வருகிறார். அது குறித்து வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை.
பதவி பிரமாணம் மேற்கொண்ட பிறகு, தண்டனை பெற்ற ஒருவரை சிறையில் சென்று சந்திக்க கூடாது என்பது மரபு, அதன் அடிப்படையில் தான் சிறைக்கு சென்று சசிகலாவை முதல்வர் எடப்பாடி சந்திக்கவில்லை. இந்த நிலையில் பொய்யான தகவலை தினகரன் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. தனக்கு நேர்ந்த தோல்விகளால், கையாளாக தனத்தின் காரணமாக தினகரன் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதேபோன்று பேசினால், நாங்களும் சில செய்திகளை வெளியிட வேண்டி வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது. அதன் மீது கருத்து சொல்வது சட்டவிரோதமாகும். சபாநாயகர் மேற்கொண்ட முடிவை விமர்சனம் செய்ய முடியாது. அதன் மீது கருத்து சொல்லவும் முடியாது. நாங்கள் தாயாய் கருதிய முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிர்ச்சியில் இருந்த நாங்கள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலாவை தற்காலிகமாக தேர்ந்தெடுத்தோம். இப்போது எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையை, தேர்ந்தெடுத்திருக்கிறோம். இரவல் தலைமையை தேர்ந்தெடுக்கவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தினகரன் தான் 60 நாட்களில் கட்சியை இணைக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இப்போது நாங்கள் இணைந்து விட்டோம். தினகரன் இதில் என்ன குறை கண்டார். நாங்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன தவறு கண்டார் என்று அவர் கேட்டார்.
அமைச்சர்கள் மீது தினகரன் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இருந்தால் சொல்லவேண்டும். கட்சியிலும் ஆட்சியிலும் இல்லை என்பதால் பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடாது. சசிகலாவின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானதாக தினகரன் கூறுகிறார். அது தவறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால் அவரது தலைமையை ஏற்ற ஒன்றரை கோடி தொண்டர்களின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானோம். அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் ஜெயலலிதா தான். அமைச்சரவையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆட்சிக்கு முழு பொறுப்பாளர் ஜெயலலிதா தான். அவர் தான் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து இந்த ஆட்சியை வரவழைத்தவர். அ.தி.மு.க.வுக்காக எந்த இடத்திலும் தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எனவே அ.தி.மு.க.வுக்கு சொந்தம் கொண்டாட தினகரனுக்கு தார்மீக உரிமையில்லை.
இது அம்மாவின் வழிவந்த அரசல்ல என்று தினகரன் கூறுகிறார். அவர் கடந்த பத்தாண்டுகாலமாக அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்தார். வனவாசம் போயிருந்தார். எனவே அவருக்கு அம்மாவின் அரசை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இரட்டை இலையை மீட்க தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கமிஷனுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே நாளில் தீர்ப்பு வந்து விடாது. இது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள் அது சத்திய வாக்கு, அந்த வாக்கை கண்டிப்பாக இருவரும் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 6 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
22 May 2024சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று
-
குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்பான்
22 May 2024சென்னை, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.
-
கடையில் போலீஸ் சோதனை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்
22 May 2024சென்னை, பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூட்யூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்ட
-
குஜராத்தில் 10 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் கட்சி நம்பிக்கை
22 May 2024காந்திநகர், இந்தியாவில் அரசியல் மாற்றத்துக்கான அலை வீசுவதாகவும், இதனால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்றும், அக்கட்சியின் குஜராத் மாநி
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது : சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
22 May 2024சென்னை : வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
அரியானா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் : கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் திட்டம்
22 May 2024சண்டிகர் : அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' அடுத்த மாதம் துவக்கம்
22 May 2024சென்னை : தமிழகத்தில் 5 லட்சம் ஏழை குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.
-
சர்ச்சை கருத்துகள்: பிரசாரத்தில் கூடுதல் கவனமுடன் பேச நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள் : பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
22 May 2024புதுடெல்லி : பிரசாரத்தின் போது சர்ச்சை கருத்து தெரிவிப்பதாக வந்த புகார்களை அடுத்து கவனத்துடன் பேசுமாறு நட்சத்திர பேச்சாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்று பா.ஜ., தலைவர் நட
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு
22 May 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன.
-
கோலி உயிருக்கு ஆபத்து?
22 May 2024ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைட
-
கனமழை எதிரொலி: சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
22 May 2024தென்காசி : குற்றாலம், கொல்லிமலை உள்ளிட்ட அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு
-
ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தி ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா
22 May 2024அகமதாபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: குண்டு எறிதல் போட்டியில் சச்சின் கிலாரிக்கு தங்கம்
22 May 2024கோபி : பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி தங்கம் பதக்கம் வென்றார்.
-
முதல் டி- 20 போட்டி: வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா
22 May 2024ஹூஸ்டன் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் காம்பீர்? - தேர்வு செய்வதில் தடுமாறும் பி.சி.சி.ஐ.
22 May 2024மும்பை : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
மே 27-ல் முடிவு...
-
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு
23 May 2024சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்
23 May 2024சென்னை, கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.