முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி ஆடுவது உறுதியானது அணி வீரர்கள் ஏலம் எடுப்பதில் ஐ.பி.எல். புதிய கட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை: அணி வீரர்கள் ஏலம் தொடர்பாக புதிய கட்டுப்பாட்டை விதித்தது ஐ.பி.எல் நிர்வாக குழு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவது உறுதியானது.

சூதாட்டப் புகார்
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது. எனவே, அந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. அந்த தடைக்காலம் கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் வரும் ஐ.பி.எல்.லில் மீண்டும் களம் இறங்குகின்றன.

மீண்டும் டோனி ...
இதனால், ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய தோனியை, ஏலத்தில் எடுக்க  பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்க கூடும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் புதிய திட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கபட்டு உள்ளது.  அதாவது, புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களில் மூன்று பேரை (ஒரு உள்நாட்டு வீரர், 2 வெளிநாட்டு வீரர்கள்)  சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தக்கவைத்து கொள்ளலாம். இதன் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவார்.

அதிகரிக்க முடிவு
கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடிய வீரர்களில் 5 பேரை மட்டுமே அணி உரிமையாளர்கள் தக்க வைக்க முடியும்; அணி வீரர்கள் ஏலம் தொடர்பாக புதிய கட்டுப்பாட்டை விதித்தது ஐ.பி.எல். நிர்வாக குழு. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களை தேர்வு செய்ய பட்டியல் தயாராக உள்ளது. 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடி ரூபாயிலிருந்து மொத்த உரிமத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து