எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலைக் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், முன்னிலையுரையாற்றினார். திருப்பத்தூர் வட்டாட்சியர் ஸ்ரீராம் வரவேற்புரையாற்றினார்.
அமைச்சர் பேச்சு
இம்மனுநீதி நாள் முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாதம் தோறும் நடைப்பெற்று வருகிறது. அதனடிப்படையில் திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலைக் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது. இதுபோன்று கிராமங்களில் பல கட்டங்களில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம்களால் கிராம மக்களின் குறைகள் படிப்படியாக களையப்பட்டு கிராமம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது.
பொதுவாக மலையில் வசிப்பவர்களின் உறவுகள், வியாபாரம் முதலியன வசிக்கும் மலையினை சுற்றியே இருக்கும். ஆனால் ஏலகிரி மலையில் வசிக்கும் மக்களின் வளர்ச்சி ஏலகிரி மலையோடு நின்றுவிடாமல் போக்குவரத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. குறிப்பாக 2001 ஆம் ஆண்டு மத்திய சுற்றுலாப்பிரிவு அலுவலர் அவர்களை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து சென்னை மற்றும் பெங்களுர் மத்தியில் உள்ள சுற்றுலாத் தடமான ஏலகிரி மலையை பார்வையிட்டு ஏலகிரி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தேன். அக்கோரிக்கையினை மத்திய சுற்றுலாப்பிரிவு அலுவலர் ஏற்று ரூ.14 கோடி ரூபாயை ஏலகிரி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கினார். அந்நிதியில் இயற்கை பூங்கா, படகு இல்லம், நிலா வீடு, சாகச நிகழ்ச்சித் திடல் ஏற்படுத்தப்பட்டது. 2001-ற்கு பிறகு தான் எல்லா தெருக்களுக்கு சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், கிணறு வசதிகள் போன்ற வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று மலைவாழ் மக்களின் முக்கிய கோரிக்கையான சாதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களுக்களின் குழந்தைகளின் கல்விக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இச்சலுகைகளை பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகள் நன்கு தேர்ச்சி பெற்று கல்லூரியில் பயின்று உலக சாதனைகளை புரிய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் வருவாய்த் துறையின் சார்பில் 38 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களும், 44 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 1 பயனாளிக்கு ரூ.20,000- நலிந்தோர் நிவாரணத் தொகையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றமும், 5 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான இந்திராகாந்தி விதவை உதவித் தொகையும், 9 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.1,82,500-ற்கான காசோலைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,20,000-ற்கான காசோலைகளையும், 6 பயனாளிகளுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகை ரூ.36,000-ற்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி ரூ.16,000-ற்கான காசோலைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 13 நபர்களுக்கு வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் செடிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1,12,000- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.8,600- மதிப்பில் சலவைப்பெட்டிகளையும், 42 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகளையும் ஆக மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சத்தி 60 ஆயிரத்து 615- (ரூ.51,60,615-) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) கிருஷ்ணவேனி நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், ., மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்புத் துறை துணை கலெக்டர் பேபி இந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சிவகாமி, இணை இயக்குநர் வேளாண்மை(பொ) வாசுதேவரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி, உதவி இயக்குநர் (நில அளவை) கண்ணபிரான், துணை இயக்குநர் (பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு) மரு.தேவபார்த்தசாரதி, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித் துறை) பிரேம்குமார், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024