முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவத் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல்: ராஜஸ்தான் அரசு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் :  பத்மாவத் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு அனுமதி வழங்கி, சுப்ரீம் கோர்ட் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்ட நிலையில், அதனை மறுஆய்வு செய்யக் கோரி, ராஜஸ்தான் அரசு மனு தாக்கல் செய்யும் என்று அந்த மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவத் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. அதை எதிர்த்து, படக் குழுவினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சில தினங்களுக்கு முன் விசாரித்த சுப்ரீம் கோர்ட், பத்மாவத் திரைப்படத்தை நாடு முழுவதும் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும். அதில், ராஜ புத்திர அமைப்பான கர்னி சேனையும், தன்னை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, ராணி பத்மாவதியின் பெருமையைப் போற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட காலண்டரை, ராஜ புத்திர பெண்கள் அமைப்பு ஜெய்ப்பூரில் வெளியிட்டுள்ளது. பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த காலண்டரை வெளியிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து