எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பல், உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துமவனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால், உறவினரின் சடலத்தை இளைஞர் தோளில் சுமந்து சென்ற கொடூரம் நடந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பெஹ்ஜோய் அரசு மருத்துவமனையில் சுரஜ்பால் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு உறவினர் கோபிச் சந்த் மருத்துவர்களிடம் சென்று கேட்டார். ஆனால், அவர்கள் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவில்லை. இதுகுறித்து கோபிச்சந்த் கூறுகையில், எனது உறவினர் சுரஜ்பாலுக்கு வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். அவரது உடலை வீடு கொண்டு வந்த சேர்க்க ஆம்புலன்ஸ் கேட்டும் கிடைக்கவில்லை.
அரசு மருத்துவமனை ஊழியர்கள் உதவவில்லை. உடலை தூக்கிச் செல்ல ஸ்டெரச்சர் மட்டுமாவது தருமாறு கோரினோம். ஆனால் உடலை எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியேறுமாறு மருத்துவமனை ஊழியர்கள் எங்களை விரட்டினர். இதனால் வேறு வழியின்றி சடலைத்தை எனது தோளில் தூக்கிக் கொண்டு வந்தேன் எனக் கூறினார்.
இதையடுத்து, இறந்தவரின் உடலை சுமந்தபடியே கோபிச்சந்த் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே வீடு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. துணை கலெக்டர் பிரீத்பால் சிங் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரு மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் தங்கள் பணியை சரிவர செய்யவில்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இரு மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு, மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்1 day 12 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 17 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
கூட்டணி கட்சிகளுக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் நெருக்கடியால் குழப்பம்
06 Jun 2024புதுடெல்லி:கூட்டணி கட்சிகளுகக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Jun 2024சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ., எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார்
06 Jun 2024புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜ.க, எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்கும் நரேந்திரமோடி ஆட்சி அமை
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
ஆந்திர முதல்வராக ஜூன் 12-ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
06 Jun 2024ஐதராபாத்: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வருகின்ற 12-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கு
-
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர் குழு சந்திப்பு புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்
06 Jun 2024புதுடெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணையர் குழு நேற்று சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.
-
சீனா விசா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம்: தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு
06 Jun 2024சென்னை, ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம்?
06 Jun 2024சென்னை: தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.