முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 30ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால், கால அவகாசத்தை நீட்டிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்ததாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து, ஜூன் 2-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து