எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை- மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.சிறப்புரை ஆற்றினார். இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ)செல்வம், நிர்வாகிகள் அம்பலம், பஞ்சம்மாள், தக்கார் பாண்டி, செல்லப்பாண்டி, ராமகிருஷ்ணன், பிச்சைராஜன், முருகேசன்,வெற்றிச்செழியன், அலங்கை ரவிச்சந்திரன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், இரா.முத்துக்குமார், முனியாண்டி,கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல்,பூமாராஜா, துதிதிருநாவுக்கரசு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனையில் முதன் முதலாக 1986 - ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்று காவிரி பிரச்சனைக்கு முதன்முதலாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.அதனைத்தொடர்ந்து அம்மா 1991ம் ஆண்டு காலம் முதல் காவிரிக்காக பல்வேறு போராட்டங்களை செய்தது மட்டுமல்லர்து 1993ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை செயல்படுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தொடர்ந்து 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து மாபெரும் வெற்றி கண்டவர் அம்மா.
தொடர்ந்து 2001ம் ஆண்டு முதல் 2006 வரை காவிரி இறுதிதீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் மாபெரும் சட்டபோராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாது 19-02-2013 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பை மத்தியஅரசிதழில் வெளியிடச்செய்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார் மறைந்த முதல்வர் அம்மா.
காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பை செயல்படுத்தும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் பங்கீட்டு குழுவையும் அமைக்க 11-11-2013 அன்று மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று மாபெரும் சட்டபோராட்டத்தை நடத்தினார். தற்போது அம்மாவின் மறைவிற்குப்பின் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் அம்மா வழியில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டபோராட்டங்களை நடத்தினார்கள். இதன் பலனாக 06-02-2018 அன்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர்பங்கீட்டுக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. தொடர்ந்து இதனை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தியதன் காரணமாக 18-05-2018 அன்று காவிரி மேலாண்மை வாரியம் காவிரி நதிநீர்பங்கீட்டுக்குழுவை மத்திய அரசு அமைக்க ஒப்புதல் அளித்தது.
அதனையொட்டி 02-07-2018 அன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆணையத்தின் முதற்கட்ட கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜுன்மாதம் வழங்கும் தண்ணீரின் அளவான 31.24 டி.எம்.சியை உடனடியாக திறக்க ஆணையிட்டது. இதன் மூலம் அம்மாவின் வழியில் தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி காவிரியில் 125 ஆண்டுகால போராட்டத்தில் மாபெரும் தேடித்தந்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவிலேயே முதன்மை தேசமாக தமிழகத்தை உருவாக்கும் வண்ணம் தொடர்ந்து பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வந்த அம்மா மருத்துவதுறையில் புதிய சகாப்தம் படைத்திருக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில்உருவாக்க 2013அன்று சட்டசபையில் 110விதியின் கீழ் அறிவித்து தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்கள். அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் உருவாக்கிட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பாரதபிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அதனையொட்டி 20-06-2018 அன்று ரூ.1500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை புறநகர் பகுதியிலுள்ள தோப்பூரில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது.அம்மாவின் எண்ணத்தை நனவாக்கிய பாரதபிரதமருக்கும், தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் இக்கூட்டத்தின் வாயிலாக கோடான கோ நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
காவிரி பிரச்சனையில் தன் சுயலாபத்திற்காக 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து மாபெரும் துரோகத்தை தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்தது மட்டுமல்லாது தொடர்ந்து அம்மா காவிரிக்காக போடப்பட்ட வழக்கில் 2007ம் ஆண்டு தீர்ப்பு வந்த போது அந்த தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாமல் கிடப்பில் போட்டு தொடர்ந்து அடுக்கடுக்கான துரோகத்தை செய்து அந்த துரோகத்தை மறைக்க காவிரி நதிநீர் பிரச்சனையில் பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை பரப்பி அதன் மூலம் அரசியல் விளம்பரம் தேடிய ஸ்டாலின் முகத்திரையை அம்மாவின் அரசு கிழித்தெறிந்தது. மக்களின் வேண்டுகோள் படி 29-03-2013அன்று ஸ்டெர்லைட் ஆலையின் மிண் இணைப்பை துண்டித்து ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் அம்மா.ஆனால் ஆலையின் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் மீண்டும் ஆலையை இயக்கியது அம்மா வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் இந்த அம்மாவின் அரசு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டும், மின் இணைப்பை துண்டித்தும் 06-06-2018 அன்று ஆலையை நிரந்தரமாக மூடிய அம்மாவின் அரசுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 12-03-2009ம் ஆண்டு 230 ஏக்கர் நிலம் கொடுத்தது அப்போதிருந்த தி.மு.க. அரசு.மத்திய அமைச்சராக ராஜா இருந்த போது அந்த ஆலையின் நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்து தற்போது ஸ்டெர்லை ஆலை பிரச்சனையில் மக்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வரும் ஸ்டாலினை ஒரு போதும் மக்கள் நம்ப மாட்டார்கள். தொடர்ந்து இது போன்று அம்மாவின் அரசுக்கு எதிராக பொய்பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.வின் செயல்படாத தலைவர் ஸ்டாலினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் தனது இறுதி உரையில் தனது லட்சியத்தை எடுத்துரைத்தார். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவது கடைக்கோடியில் தொண்டனாக இருக்கும் அனைவரின் கடமையாகும். ஆகவே கழக அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துரைத்து அ.தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளின் பொய்பிரச்சாரங்களை நாம் முறியடித்து கழகத்தை வலிவோடும், பொலிவோடும் கட்டிகாப்பாற்றி அம்மாவின் புகழை காப்பாற்றி வரும் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகரில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகள் தோறும் வாக்குச்சாவடி முகவர்களை விரைவாக நாம் அமைத்து வரும் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றி அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியினை பெற்றுத்தர சபதம் மேற்கொள்வோம். இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
அக்கரன் விமர்சனம்
06 May 2024எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் அக்கரன் படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு நபர்களைக் கடத்தி, அவர்களை துன்புறுத்தி கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.