முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விவகாரத்தில் பொய் பேசுகிறார் நிர்மலா சீதாராமன் பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

பொய் ...ஊழலை நியாயப்படுத்தி பேசுமாறு பணிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன், தான் பேசி வருவது பொய் என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்து வருகிறார். முன்னாள் எச்.ஏ.எல். நிறுவன தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் பேசுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

ராஜினாமா....ரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியுள்ளார். இதற்கு மேலும் நிர்மலா சீதாராமன் சொல்லும் பொய்களை நம்ப முடியாது, ஏற்க முடியாது. அவர் தனது பதவியில் நீடிக்கும் தகுதியையும் இழந்து விட்டார். அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளார்.

திறமையானவர்கள்....முன்னதாக டி.எஸ். ராஜு அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவிலேயே ரபேல் விமானங்களை கட்டமைக்க முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு உண்டு. நமது என்ஜீனியர்கள் திறமையானவர்கள். இதுதொடர்பான கோப்புகளை மத்திய அரசு ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று தெரியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து