முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் புதிய விமான நிலையம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜார்சுகுடா,ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்கள் நிறைந்த ஜார்சுகுடா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது ஒடிசா மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கும், நாகரீக வளர்ச்சிக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைந்திருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

ஒடிசாவில் இதுவரை ஒரே ஒரு பெரிய விமான நிலையம் மட்டுமே அமைந்திருந்தது. அதே சமயம், குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 5 விமான நிலையங்கள் இருப்பதையும் மோடி சுட்டிக்காட்டினார். கனிம வளங்கள் நிறைந்த இப்பகுதியில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏராளமான முதலீட்டாளர்கள் இப்பகுதிக்கு வந்தடைய முடியும் என்றும், நாட்டின் கிழக்கு மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாமை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை சமநிலைப்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து