எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சபரிமலை,மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை குவிக்கப்பட்டுள்ளது சோதனைக்கு பிறகே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மாதாந்திர பூஜை நடத்துவதற்காக திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களுக்கு நடை திறக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இதேபோன்று நடை திறக்கப்பட்டபோது, பெண்களை அனுமதிக்க மறுத்து கடும் போராட்டங்கள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு, இந்த முறை காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில், 100 பெண் காவலர்கள் உள்பட 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 20 பேர் அடங்கிய கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகள் உள்பட பல இடங்களில், சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி தீபஒளித் திருநாளின் நள்ளிரவுப் பொழுது வரையில் 144 தடையாணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு வயது ரீதியான கட்டுப்பாடு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28-இல் உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 17-ஆம் தேதி, மாதாந்திர பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, நடுத்தர வயதைச் சேர்ந்த 12 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தனர். இருப்பினும், பக்தர்களின் கடுமையான போராட்டங்கள் காரணமாக அப்பெண்கள் கோயிலுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. அதே, அந்த போராட்டங்களின்போது ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக கேரள அரசு கூறி வருகிறது.
மீண்டும் நடை திறப்பு: இத்தகைய சூழலில், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் மீண்டும் திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதரி ஆகியோர் ஸ்ரீகோயிலை, 5-ம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து விளக்கு ஏற்றவுள்ளனர். அதற்கு அடுத்த நாளில் சித்ரா திருநாள் பூஜை நடத்தப்பட்ட பின்னர், இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: நிலக்கலுக்கு செல்லும் பல்வேறு வழிகளில், காவல்துறை வேகத் தடுப்புகளை அமைத்துள்ளது. காவல்துறையினரின் சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படவுள்ளன. அதுவும், நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இதற்கிடையே, பக்தர்களின் போராட்டத்துக்கு பக்க பலமாக இருக்கும், மாநில பா.ஜ.க.வின் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மர்ம நபர்கள், துரித அஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார் - கேரள அரசு: சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களை, முன்னின்று ஒருங்கிணைத்து வரும், நாயர் சமுதாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், நாயர் சங்கத்தினருடனான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு அரசு தயாராகி வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் இருக்கிறோம். நாயார் சங்க அலுவலகத்தை, மர்ம நபர்கள் திட்டமிட்டுத் தாக்கியுள்ளனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.