முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

37 அணிகள் பங்கேற்கும் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - சென்னையில் இன்று தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

சென்னை : இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள், 1200 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று சென்னையில் தொடங்குகிறது.

செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு பால் பேட்மிண்டன் சங்கம் சார்பில் 65-வது தேசிய சீனியர் பால் பேட்மின்டன் (பூப்பந்து) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.இந்த போட்டி இன்று  (17-ம் தேதி) முதல் 21-ம் தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் 28 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள், 6 கல்வி நிறுவனங்கள் ஆக மொத்தம் இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள் பங்கேற்கின்றன. 1200 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.இந்த போட்டியை செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் பி. பாபு மனோகரன் தொடங்கி வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து