எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அன்று ஒரே தினத்தில் சுமார் 25 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (17-ம் தேதி) தமிழகத்தில் இரண்டாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக இருந்தது. தடுப்பூசி குறைவாக இருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகளைப் பெறும் பணி நடைபெற்றதாலும் அந்த முகாம் நேற்று (19-ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டன. முன்பு போலவே காலை 7 மணிக்குத் தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல்லில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள் குறித்துப் பொதுமக்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, முதல்வரின் உத்தரவின்படி. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் 26.8.2021 அன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
12.9.2021 அன்று தமிழகம் முழுவதும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 21,48,526 முதல் தவணை தடுப்பூசிகள், 7,42,495 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 28,91,021 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று(நேற்று) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், மொத்தம் 1,600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்துக் கேட்டறிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்1 day 5 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 11 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Jun 2024சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
கூட்டணி கட்சிகளுக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் நெருக்கடியால் குழப்பம்
06 Jun 2024புதுடெல்லி:கூட்டணி கட்சிகளுகக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம்: தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு
06 Jun 2024சென்னை, ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
பா.ஜ., எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார்
06 Jun 2024புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜ.க, எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்கும் நரேந்திரமோடி ஆட்சி அமை
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.
-
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர் குழு சந்திப்பு புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்
06 Jun 2024புதுடெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணையர் குழு நேற்று சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.
-
சீனா விசா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சி அமைக்கும் முன்பாகவே வன்முறை: தெலுங்கு தேசம் மீது ஜெகன் மோகன் புகார்
06 Jun 2024அமராவதி, ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்று ஒய்.எஸ்.ஆர்.
-
மோடி பதவியேற்பு விழா: அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
06 Jun 2024புது டெல்லி, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.