எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பி.சி.சி.ஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளி்த்த பேட்டியில் கோலி குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது., இன்றுள்ள நவீன கால கிரிக்கெட் வீரரான விராட் கோலியைப் பற்றி விமர்சிப்பவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏனென்றால், இதுபோன்ற பயோ-பபுள் சூழலில் இருந்து கொண்டு விளையாடுவது கடினம். ஆதலால், கோலியின் முடிவை விமர்சிப்பதும், அவரை விமர்சிப்பது நியாயமற்றது. கோலி அனைத்துப் பிரிவிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எனக்கு பெரிய வியப்பை அளிக்கவில்லை. இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (வயது 41). இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் என மொத்தம் 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம், 711 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 3,569 ரன்களை எடுத்து உள்ளார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 32.46 சராசரியும் வைத்துள்ளார். இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு இருபது ஓவர் ஆசிய கோப்பையில் விளையாடிய அவர், அதன்பின்பு அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனது ஓய்வு அறிவிப்பினையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அவரது டுவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள். கவனமுடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-6, 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் அர்ஜென்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மான் 6-7 (6-8), 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கொன்னலிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸின்யு வாங்கை சாய்த்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவரான இங்கிலாந்தின் இளம் புயல் எம்மா எடுகானு 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 98-ம் நிலை வீராங்கனையான டான்கா கோவினிச்சிடம் (மான்ட்னெக்ரோ) வீழ்ந்து நடையை கட்டினார்.
அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் ?
எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நாளை (ஜனவரி 22) தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்க உள்ளன.
இந்நிலையில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணியின் நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் இதனை அகமதாபாத் அணி செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்ட்யா மட்டுமல்லாது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷூப்னம் கில்லை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான விவரம் இன்று உறுதியாக தெரிந்துவிடும்.
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து: இந்தியா - ஈரான் போட்டி `டிரா’
20வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. நேற்று ஏ பிரிவில் முதல் போட்டியில் சீனா- சீன தைபே மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின.
இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ஆட்டம் சமனில் முடிந்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயை வரும் 23ம் தேதி சந்திக்கிறது. இன்று ஜப்பான்-மியான்மர், ஆஸ்திரேலியா-இந்தோனேசியா, தாய்லாந்து-பிலிப்பைன்ஸ், வியட்நாம்-தென்கொரியா மோதுகின்றன.
ஆஸி. ஓபன் இரட்டையர்: சானியா ஜோடி முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்வியாடெக் (போலந்து), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), டாரியா கசட்கினா (ரஷியா), மேடிசன் இங்லிஸ் (ஆஸ்திரேலியா), பாவ்லிசென்கோவா (ரஷியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணை 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குனிச்- நிகோலா காசிச் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.