எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உ.பி., உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதே போல் மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ந்தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 3 மாநிலங்களில் பிப்ரவரி 14-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் வீட்டோ நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்றும் பஞ்சாபில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிய வந்தது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்றாலும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
உ.பி.யில் பா.ஜனதா கூட்டணிக்கு 212 முதல் 231 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், சமாஜ்வாடி கட்சிக்கு 147 முதல் 158 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10-ல் இருந்து 16 தொகுதிகளும், காங்கிரசுக்கு 9-ல் இருந்து 15 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 2 அல்லது 5 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
உ.பி.யில் அடுத்த முதல்- மந்திரி யார்? என்பதற்கு 52.3 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36.2 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 7.2 சதவீதம் பேர் மாயாவதிக்கும், 3.4 சதவீதம் பேர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். கருத்து கணிப்பில் பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. அக்கட்சிக்கு 57 முதல் 60 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 43 முதல் 46 தொகுதிகளும், சிரோன்மணி அகாலி தளம் கட்சி 10 முதல் 13 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு வெறும் 3 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் எனவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
உலக சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கடற்கரை மாநிலமான கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பிரமோத் சவாந்த் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறையும் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் எனவும், அக்கட்சி 20 முதல் 23 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 6 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 6 முதல் 10 இடங்களும், சுயேட்சைகள் 5 முதல் 6 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் புஸ்கர்சிங் தாமி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவே ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பா.ஜனதா 42 முதல் 46 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடிக்கும். காங்கிரசுக்கு 12-ல் இருந்து 16 தொகுதிகளும், ஆம்ஆத்மி கட்சிக்கு 8-ல் இருந்து 11 தொகுதிகளும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 17 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 23 hours ago |
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
பாட்டியாலாவில் விபத்து: 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி
18 May 2024பாட்டியாலா : பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
லக்னோ ஆறுதல் வெற்றி
18 May 2024மும்பை : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி ஆறுதல் வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
பார்லி. தேர்தலில் இன்டியா கூட்டணி வெல்லும்: பா.ஜ.க.வின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
18 May 2024சென்னை : மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள
-
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
18 May 2024சென்னை : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை.
-
ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது
18 May 2024புது டெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி.
-
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
18 May 2024திருச்சி : 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பாண்ட்யாவுக்கு தொடரும் சோதனை: 2025 ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை
18 May 2024மும்பை : அடுத்த சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் விளையாட பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இந்திய மசாலாக்களுக்கு தடை விதித்த நேபாளம்
18 May 2024காத்மாண்டு : இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்தக் குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல்: 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது
18 May 2024லக்னோ : பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
-
இதுவே கடைசி போட்டியாக இருக்கலாம்: டோனியுடனான நட்பு குறித்து மனம் திறந்தார் விராட் கோலி
18 May 2024பெங்களூரு : யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம் என்று நேற்று சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடும் முன் பெங்களூரு வீ
-
நாட்டில் 40 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யாமல் இயக்கம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
18 May 2024புதுடெல்லி : நாட்டில் 40 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யாமல் இயக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.