முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது : தமிழக அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

1) சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி.

2) தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கா.ஜெயமோகன்.

3) சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன்.

4) விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பா.இனாயத் பாஷா.

5) செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் சு.சிவனேசன். ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வருகிற ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து