எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள் மற்றும் 1.65 லட்சம் விசைத் தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
ஆனாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நேற்று முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த ஒவ்வொரு பிரிவு அலுலகத்திலும் தலா ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஊழியர் பொதுமக்களுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து கொடுக்கிறார். இதற்காக பொது மக்கள் தங்களின் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்தால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். இதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர்களின் செல் போனுக்கு குறுஞ்செய்தியும் வரும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க முடியும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டண அட்டையுடன் தங்களின் ஆதார் அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்று இணைக்க வேண்டும். சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் இணைப்புடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்த பிறகு வீடு மாறி செல்லும் நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற குழப்பம் வாடகை தாரர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் வீடு மாறி வேறு வீட்டுக்கு குடியேறும் போது அந்த வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களின் ஆதார் எண்ணை இணைத்து மின் கட்டணம் செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்படுமோ? வாடகைதாரர்கள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடினால் எதிர்காலத்தில் ஏதாவது சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வாடகைதாரர்களின் ஆதார் இணைப்பு மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் உரிமைகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளிடையே மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் பொது மக்களுக்கு உள்ளன.
ஆனால் அந்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு நிவர்த்தி செய்வது என்று அவர்களுக்கு தெரிய வில்லை. முகாம்களில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சரியாக பதில் சொல்ல தெரிய வில்லை. இதற்கிடையே பொது மக்களின் கேள்விக்கு இணையதளத்தில் பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.