முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் அருகே 9 பேரை பலிவாங்கிய பட்டாசு ஆலை குடோன் விபத்தில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Kanimozh-1 2023 03 22

காஞ்சிபுரம் அருகே 9 பேரை பலிவாங்கிய பட்டாசு ஆலை குடோன் விபத்தில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை குடோனில் நேற்று  திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து