முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      இந்தியா
Accident-1

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில்  6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 25க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உன்னாவ் ஹர்டோய் சாலையில் ஜமால்திபூர் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சுக்குநூறானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து