முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      இந்தியா
Election 2023-11-06

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதை அடுத்து நாளை 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவும் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நாளை (மே 7-ம் தேதி) 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 3ம் கட்டத்தில் குஜராத், கர்நாடக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. கோவா மற்றும் குஜராத்தில் மக்களவைத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது மத்தியபிரதேச மாநிலம் பெத்துல் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவை முன்னிட்டு கடைசி நாளான நேற்று அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். இதனை அடுத்து நேற்று மாலை 6 மணியுடன் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து