எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாகுபலி. இதன் 2 பாகங்கள் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்றது.
இந்நிலையில் பாகுபலி அனிமேஷன் தொடராக வெளியாகவிருக்கிறது. இதில் பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸின் முகம் சிஎஸ்கே அணியின் வீரர் முன்னாள் இந்திய கேப்டனுமான டோனியைப் போலவே இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து டோனியை பிடித்ததால் இப்படி உருவாக்கினீர்களா என்ற கேள்வி ராஜமௌலியிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி, “என்னைப் போலவே இந்தக் கதாபாத்திரத்தை அனிமேஷனில் உருவாக்கியவரும் டோனி ரசிகராக இருந்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.
__________________________________________________
இன்று டிக்கெட் விற்பனை
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 12ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
__________________________________________________
சஞ்சு சாம்சனுக்கு பாராட்டு
இந்த ஐபிஎல் தொடரில் சாம்சன் 11 போட்டிகளில் 471 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கிறார். சராசரி 67.29. ஸ்டிரைக் ரேட் 163.54 ஆகும். டி20 உலகக் கோப்பை அணியிலும் சாம்சன் தேர்வாகியுள்ளார். “46 பந்துகளில் 86 ரன்கள் என சஞ்சு சாம்சன் தனது கனவு இன்னிங்ஸை விளையாடி வருகிறார். இந்தத் தொடர் முழுவதுமே சுழல் பந்துகள், வேகப் பந்துகளை தனது உடல் பலத்தினால் அருமையாக விளையாடுகிறார்.
சாம்சன் ஃபிட்ன்ஸில் நல்ல உடல் பலத்தைப் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் உடல் பலம் மிகவும் முக்கியம். அணிக்காக தனது முழு அர்ப்பணிப்பினை தருகிறார். அவருக்கு தேவையானது அதிர்ஷடம் மட்டுமே” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழ்ந்து பேசியுள்ளார். வருண் ஆரோன், “சாம்சன் ஆஃப் சைட் வீசப்படும் மெதுவான பந்துகளை எளிதாக சிக்ஸர் அடிக்கிறார். தனது காலை நகர்த்தாமல் அடிக்கிறார். அதிசயமாக கலீல் அஹமது வீசிய பவுன்சரில் ஆட்டமிழந்தார். அதைத் தவிர்த்து அற்புதமாக ஆடி வருகிறார்” எனப் புகழாரம் சூட்டினார்.
__________________________________________________
சூர்யகுமாருக்கு லாரா ஆதரவு
டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், அணிகளின் ஆடும் லெவனில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா இந்திய அணியின் 3வது வரிசையில் விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு ஆலோசனை என்னவெனில் சூர்யகுமார் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் ஒருவர். விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களிடம் பேசும் போது அவர் முன்கூட்டியே களத்தில் விளையாடுவதை விரும்புவதாக சொல்வார்.
சூர்யகுமார் விஷயத்திலும் நானும் அதையே உணர்கிறேன். அவரை முடிந்தளவுக்கு முன்கூட்டியே களமிறக்க முயற்சிக்க வேண்டும். அவர் துவக்க வீரர் கிடையாது. எனவே முன்கூட்டியே களமிறங்கி 10 - 15 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் உங்களை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் செல்வார். அது மற்றவர்கள் தங்களுடைய இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். எனவே அவரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்கான வழியை கண்டறியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
__________________________________________________
சாம்சன் குறித்து சங்ககாரா
ராஜஸ்தான் - டெல்லி மோதிய போட்டியில் பலவிதமான ஸ்மார்ட் சிஸ்டம் கொண்ட ஐபிஎல் போட்டியில் அவசர கதியில் விக்கெட் கொடுத்தது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரும் இலங்கை முன்னாள் வீரருமான குமார் சங்ககாரா கூறியதாவது: இது கோணம், ரீப்ளேவை பொறுத்தது. அவரது கால் எல்லைக் கோட்டினை தொட்டது போல் தெரிந்தது. 3ஆவது நடுவருக்கு இது சற்று கடினமான ஒன்று. போட்டியின் முக்கியமான நேரத்தில் இப்படி நடப்பது எல்லோருக்கும் வித்தியாசமான பார்வைகளைத் தரும். கடைசியில் நாம் 3ஆவது நடுவரின் தீர்பை ஏற்க வேண்டும்.
எங்களுக்கு வேறு கருத்துகள் இருந்தால் நடுவர்களிடம் முறையிட்டு தீர்த்துகொள்வோம். அந்த விக்கெட்டினை பொருட்படுத்தாமலும் நாங்கள் போட்டியில் வென்றிருக்க வேண்டும். தில்லி அணியினர் இறுதியில் நன்றாக பந்து வீசினார்கள் என்றார். இந்த சம்பவத்தினால் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________
வங்காளதேச அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி இரு டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த அணியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் இடம் பெறாத சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), லிட்டன் குமார் தாஸ், தன்சித் ஹசன் தமீம், ஷகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி அனிக், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், சவுமியா சர்கார், தன்வீர் இஸ்லாம், முகமது சைபுதீன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே மைதானத்தில் 3,005 ரன்கள்: விராட் கோலி சாதனை
19 May 2024பெங்களூரு : ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
ரன்-ரேட் ...
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.