முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது

வியாழக்கிழமை, 9 மே 2024      இந்தியா
Money

ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கரிகாபாடு சோதனை சாவடியில்  உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து