எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி. சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள், அபிஷேக் சர்மா 75* (28) ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தின டிராவிஸ் ஹெட்டை பிரபல இணையத்தொடர் நாயகனுடன் ஒப்பிட்டு ஹெட் மாஸ்டர் என ஐதராபாத் புகழ்ந்துள்ளது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் பேசியதாவது., 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது நன்றாக இருந்தது. அபியும் நானும் இதுபோல சில பார்ட்னர்ஷிப்புகள் கொண்டுள்ளோம். நல்ல நிலையில் நின்றுகொண்டு பந்தினை பார்த்து அடிப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. முடிந்த அளவுக்கு பவர் ஃபிளேவை உபயோகிக்க வேண்டும். ஸ்பின்னர்களை அடிப்பதற்காக தனியாக பயிற்சி எடுத்து வருகிறேன். மே.இ.தீவுகளிலும் இது எனக்கு உதவும் என நம்புகிறேன். இந்த புதுமையான காலத்தில் 360 கோணத்திலும் அடிப்பது முக்கியம். கடைசி 12 மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவுக்காக எப்படி ஆட சொன்னார்களோ அதையேதான் இங்கும் ஆடுகிறேன். பெரிதாக எதையும் மாற்றவில்லை. ஸ்பின்னர்களை அபிஷேக் மாதிரி யாரும் ஆடுவதில்லை என்றார்.
லக்னோ கேப்டன் ராகுல் அதிர்ச்சி
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி. இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்த கே.எல்.ராகுல் கேப்டன்சி (தலைமைப் பண்பு) கேள்விக்குறியாகியுள்ளது. தோல்வி குறித்து லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மாதிரியான பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறோம். இது நம்பமுடியாத பேட்டிங். எல்லா பந்துகளையும் நடு பேட்டில் அடிக்கிறார்கள். அவர்களது திறமைக்கு பாராட்டுகள்.
சிக்ஸ் அடிக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2ஆவது இன்னிங்ஸில் ஃபிட்ச் வேறு மாதிரி இருந்தது. அவர்களை விக்கெட் எடுக்க வாய்ப்பே வழங்கவில்லை. முதல் பந்திலிருந்தே எங்களை அடித்து நொருக்கினார்கள். தோல்வியின் பக்கம் இருக்கும்போது முடிவுகள் எடுத்தது குறித்து நிறைய கேள்விகள் இருக்கும். 40-50 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பவர் ஃபிளேவில் விக்கெட்டுகளை விட்டதால் எங்களால் திரும்பவும் நல்ல கணத்தை கொண்டுவர முடியவில்லை. ஆயுஷ், நிகோலஸ் பூரன் நன்றாக விளையாடி 166 கொண்டு வந்தார்கள். 240 அடித்திருந்தாலும் ஹைதராபாத் சேஸிங் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது எனக் கூறினார்.
கே.எல். ராகுலை திட்டிய உரிமையாளர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்வியை தொடர்ந்து, லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுடன் அணியின் உரிமையாளர் காட்டமாக விவாதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை, 10 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி. அடுத்தடுத்து இரு தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள லக்னெள அணியின் ரன்ரேட்டும் மோசமாக குறைந்துள்ளது.
அடுத்து வரும் இரு போட்டிகளிலும் வென்றால்தான், லக்னெள அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா காட்டமாக பேசியுள்ளார். இந்த காட்சிகள் நேரலையில் வந்த நிலையில், இணையத்தில் கே.எல்.ராகுலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். எதுவாக இருப்பினும், ஒரு அணியின் கேப்டனை அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு தரக்குறைவாக நடத்துவது நல்லதுக்கல்ல என்றும், அடுத்தாண்டு கே.எல்.ராகுல் வேறு அணிக்கு மாற வேண்டும் என்றும் ரசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
மனம் திறந்த அபிஷேக் சர்மா
பாட் கம்மின்ஸ் மற்றும் அணியில் உள்ள அனைவரிடத்திலிருந்தும் அதிக ஆதரவு கிடைப்பதால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இந்த நிலையில், பாட் கம்மின்ஸ் மற்றும் அணியில் உள்ள அனைவரிடத்திலிருந்தும் அதிக ஆதரவு கிடைப்பதால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை. எனது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களது நிபந்தனையற்ற இந்த ஆதரவு என்னை வெற்றிகரமாக செயல்பட வைப்பதாக நினைக்கிறேன் என்றார்.
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு: லாரா
உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. இந்த சூழலில் தனது சாதனையை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “கிரிக்கெட் உலகில் எனது சாதனைகளை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். அவர் சிறந்த ஆட்டத்திறனை பெற்றுள்ளார். இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். சிறந்த வீரர். அவரை முதல் முறை பார்த்தபோது எனக்கு அவருடன் பிணைப்பு ஏற்பட்டது. அந்த முதல் சந்திப்பு ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு ஒரு அதிகாலை நேரத்தில் நடந்தது. கேம் சார்ந்து கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார். மிகவும் பணிவானவர். எங்களுடனான உரையாடல் அவரை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றும் வகையில் அமைந்தது. கிரிக்கெட் குறித்து பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்” என லாரா தெரிவித்துள்ளார்.
அதே போல இந்தியாவை சேர்ந்த மற்றொரு இளம் இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா வசமும் தனக்கு அபிமானம் உண்டு என லாரா தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பயிற்சியாளராக பயணித்த போது அபிஷேக் சர்மாவுடன் புரிதல் கொண்ட பிணைப்பை கொண்டிருந்ததாக லாரா தெரிவித்துள்ளார். மேலும், தனது சாதனை முறியடிக்கப்படுவதை தான் பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 26 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
தொடர் கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு : தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
19 May 2024சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.