எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 22 - சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து பின்பு பரபரப்பான பேட்டியளித்த டாக்டர் டெக்கால், திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிரடியாக உண்மைகளை கூறியதால் மிரட்டப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சிக்கியதும் இந்த ஊழலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி கைமாறியதும் திடுக்கிட வைத்த விஷயங்கள். இந்த ஊழலை ஒட்டி அரசியல் தரகர் நீரா ராடியா, கனிமொழி மற்ற பிரபலங்கள் பேசி டேப் ஆதாரம் வெளியே வந்து கலக்கியது. ராசா மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஊழல் ஸ்பெக்ட்ரம் பணத்தை பல்வேறு வகைகளில் ராசாவும், ராசாவின் நெருங்கிய கூட்டாளிகளும் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் பல்வேறு முதலீடுகளில் பதுக்கியதும் தெரிய வந்தது. கருணாநிதியின் கலைஞர் டி.வி.க்கும் 220 கோடி ரூபாய் முறைகேடாக பெறப்பட்டதும் ஸ்பெக்ட்ரம் பணமே என்ற கருத்து பரவலாக வந்தது. இதையொட்டி ராசாவின் கூட்டாளிகள் சாகித் பல்வா, முரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் ராசாவின் நண்பரும், பினாமியுமான கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அதிபர் சாதிக்பாட்சாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முறைகேடாக முதலீடு செய்யப்பட்டு ரூ.600 கோடி பற்றியும், ராசாவின் தொடர்புகள் பற்றியும் சி.பி.ஐ. சாதிக்பாட்சாவை விசாரித்து வருகிறது. வோல்டாஸ் நிலத்தை வாங்கிய விவகாரத்திலும், கலைஞர் டி.வி. விவகாரத்திலும் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் மொரிஷியல், மலேசியா உட்பட வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட விவகாரங்களிலும் சாதிக்பாட்சா முக்கிய சாட்சியாக இருப்பார் என்று கூறப்பட்டது.
இதனிடையே சாதிக்பாட்சா தனது நிலையை சி.பி.ஐ.க்கு விளக்கியதாகவும், தனது குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனையின் பேரில் அப்ரூவராக மாற முடிவு எடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே கடந்த 16-ம் தேதி திடீரென்று மர்மமான முறையில் தனது வீட்டில் சாதிக்பாட்சா இறந்து கிடந்தார். அவரது உடலை வந்து எடுப்பதற்கு முன் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்சில் வரும் மருத்துவ அதிகாரி சாதிக்பாட்சாவை சோதனை செய்தபோதே அவர் இறந்தது தெரிந்தும் ஏன் உடலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்பதும், இறந்து போன சாதிக்பாட்சா பிரேதத்தை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனை ஏன் அனுமதித்து கொண்டது என்பதும், பின்பு பிரேத பரிசோதனை செய்யப்படாத உடலை தடயவியல் நிபுணர்கள் சோதிக்கும் முன்பே அழகாக வெள்ளைத் துணியில் முகத்தையும் மூடி ஏன் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் என்பது கேள்விக்குறியான விஷயம்.
சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் மறுதினம் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தலைமை மருத்துவர் டாக்டர் டெக்கால், டாக்டர் ராஜலட்சுமி மற்றும் தடயவியல் துறை தலைவர் தலைமையில் பிரேத பரிசோதனை 3 மணி நேரம் நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் டெக்கால், சாதிக்பாட்சா மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததால் அவர் தூக்கு மாட்டியதால் இறந்தாரா? இறந்த பின் தூக்கு மாட்டினார்களா? என்பது பற்றி தாம் எதுவும் கூற முடியாது என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். ஏற்கனவே சாதிக்பாட்சாவின் மரணத்தில் ஏகப்பட்ட அவிழாத முடிச்சுகள் உள்ள நிலையில் டாக்டரின் இந்த பேட்டி பெரும் சந்தேகத்தை கிளப்பியது. ஒரு ஆள் தூக்குப் போட்டால் குரல் வளை உடைந்து விடும், கழுத்தெலும்பும் முறியலாம். ஆனால் பிரேத பரிசோதனை டாக்டர் தூக்கில் தொங்கியதால் மரணம் என்று கூறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் டெகஸ்கா பத்திரிகைக்கு டாக்டர் டெக்கால் அளித்த பேட்டி மேலும் பரபரப்பை உண்டு பண்ணியது. ஒரு உடலை போலீசார் கொண்டு வந்தனர். அது சாதிக்பாட்சா உடல்தான் என்பது எனக்கு தெரியாது என்று கூறினார். இதே கருத்தை பெயர் கூற விரும்பாத அப்பல்லோ மருத்துவரும் கூறினார். இதனால் இந்த பிரச்சினை மர்மமாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில் டாக்டர் டெக்கால் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிரடியாக அவர் சில விபரங்களை கூறியதால் பாதிக்கப்பட்ட சக்தி வாய்ந்தவர்கள் அவரை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனது ராஜினாமா குறித்து பெருத்த சிரமங்களுக்கிடையே டாக்டரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் ஒரு மாதம் முன்பே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதாகவும், தான் வரும் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறியுள்ளார்.
டாக்டர் டெக்காலுக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவரது மனைவியும் ஒரு டாக்டர். இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை ஆகும். அதிரடியாக டாக்டரின் அறிவிப்புகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தர்ம சங்கடத்தையும், தலைவலியையும் ஏற்படுத்தியதால் டாக்டர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.