எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர், ஏப்.25 - சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, தமிழ்நாட்டை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ்பால் மேனனின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், எனவே மத்தியஸ்தர்கள் வரும் போது கையோடு மருந்துகளை கொண்டு வருமாறும் தீவிரவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த ஒரு மாநிலமாகும். இங்கு நக்சலைட்டுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்களை ஒடுக்க மத்திய அரசும், மாநில அரசும் தவறி விட்டது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் சுமார் 4 தினங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்த அலெக்ஸ்பால் மேனன் நக்சல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அலெக்ஸ்பால் மேனன் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மக்களோடு மக்களாக நெருங்கி பழகக் கூடியவர். சத்தீஸ்கரில் தீவிரவாதிகளை ஒடுக்க இவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிகிறது. எனவே இவரது உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்த நிலையில்தான் அலெக்ஸ்பால் மேனன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
இவரை மீட்டுத் தருமாறு அவரது மனைவி மற்றும் மாமனார், தந்தை ஆகியோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து கடத்தப்பட்ட கலெக்டரை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்றத்தில் தம்பிதுரையும் எழுப்பினார். மத்திய அரசும், மாநில அரசும் நக்சல் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்திய அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் தம்பிதுரை, கடத்தப்பட்ட கலெக்டரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கலெக்டரை கடத்திய தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 3 மத்தியஸ்தர்கள் கொண்ட ஒரு குழுவை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்த குழுவில் முன்னாள் தேசிய எஸ்.சி., எஸ்.டி கமிஷன் தலைவர் பி.டி. ஷர்மா, அகில இந்திய ஆதிவாசி மகாசபை தலைவர் மணீஷ் குஞ்சம் மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அறிவித்தனர். ஆனால் இக்குழுவில் இடம்பெற முடியாது என்று பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மறுத்து விட்டார். இதே போல மணீஸ் குஞ்சமும் இக்குழுவில் இடம்பெற மறுத்து விட்டார். தமக்கு கட்சிப் பணிகள் உள்ளன. மற்றும் சூழ்நிலைகளை காரணம் காட்டி இவரும் இக்குழுவில் இடம்பெற மறுத்து விட்டார். இதனால் கலெக்டரை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளோ, தாங்கள் குறிப்பிட்டுள்ள 3 நபர்கள் வந்தால்தான் பேச அனுமதிப்போம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். எனவே மத்தியஸ்தர்களாக செயல்பட தாங்கள் குறிப்பிட்ட 3 பேர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்றும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
அது மட்டுமல்ல, கலெக்டரின் உடல்நிலையும் மோசமாகி விட்டது. இத்தகவலை மாவோயிஸ்டு தீவிரவாதிகளே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கலெக்டரின் உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே மத்தியஸ்தர்கள் வரும் போது கையோடு மருந்துகளையும் கொண்டு வாருங்கள் என்று தீவிரவாதிகள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். கடத்தப்பட்ட கலெக்டர் மேனன் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் அறிக்கையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மேலும் கூறுகையில், தாமதிக்கும் தந்திரத்தில் சத்தீஸ்கர் அரசு ஈடுபடக் கூடாது. காரணம், மேனனின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கலெக்டரின் உடல்நிலை மோசமானது பற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தார் பதறிப்போய் உள்ளனர். ஆனால் தீவிரவாதிகளோ அவரை மீட்க 3 நிபந்தனைகள் விதித்துள்ளனர். பல்வேறு சிறைகளில் உள்ள தங்கள் சகாக்கள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும். தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது உட்பட 3 முக்கிய கோரிக்கைகளை அவர்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில்தான் கலெக்டரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 hours ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்6 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 5 hours ago |
-
சூர்யகுமார், பும்ராவிற்கு ஆதரவு
17 May 2024பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கான், இங்கிலாந்து அணி
17 May 2024காபூல் : டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு புதிய ஜெர்சியை ஆப்கான், இங்கிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன.
வரும் 1-ம் தேதி...
-
2020 ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியதுதான் மிகப்பெரிய சாதனை: ஜெய்ஷா
17 May 2024மும்பை : 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி எது? - சென்னை - பெங்களூரு இன்று பலப்பரீட்சை
17 May 2024பெங்களூரு : ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை அணி என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பெங்களூரு அணியை இன்று எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
வாரணாசியில் 21-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் : பா.ஜ.க. மகளிர் அணி ஏற்பாடு
18 May 2024லக்னோ : வாரணாசியில் வரும் 21-ம் தேதி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறையினர் பாராட்டு
18 May 2024துபாய் : சுற்றுலா பயணியின் கைக்கெடிகாரத்தை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
18 May 2024 -
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
18 May 2024திருச்சி : 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.