எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.30 - காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீலிக்கண்ணீர் வடிக்கிறார், கபட நாடகமாடுகிறார். உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி, உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளி வந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, 2011 வரை இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தற்போது கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்! என்ற தலைப்பில் nullநீலிக்கண்ணீர் வடித்து கடித வடிவிலே அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் போது, உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
கருணாநிதி தனது அறிக்கையில், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளி வந்த போது, இது தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் அறிக்கை வெளியிட்டதாகவும், அந்த இறுதித் தீர்ப்பைத் தான் அரசிதழிலே வெளியிட வேண்டும் என்று தற்போது பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்த உண்மை நிலைமையை நான் எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தில் தமிழகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீnullக்கறவு செய்து சாதகமான தீர்ப்பினை பெறுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் நலன் கருதி மேற்படி நதிநீnullர் பங்கீடு தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசு மத்திய அரசிதழில் வெளி வரச் செய்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை எவ்வித காலதாமதமும் இன்றி நடைமுறைப்படுத்த மனப்nullர்வமான, ஆக்கப்nullர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல், 15.4.2007 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மீது உச்ச நீnullதிமன்றம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதும் அ.தி.மு.க. தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், தி.மு.க. சார்பில் நடுவர் மன்றத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உச்ச nullநீதிமன்றம் செல்லலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு அ.தி.மு.க. சார்பில் உடன்பாடு இல்லை என்று எடுத்துரைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு விட்டால், உச்ச nullநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று ஒரு வாதத்தை வைத்தவரும் கருணாநிதி தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அ.தி.மு.க. கருத்தினை முற்றிலும் புறக்கணித்து, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சார்பில் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, 10.7.2007 அன்று காவேரி நடுவர் நீnullதிமன்றம் தமிழக அரசின் மனுவினை விசாரிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து கருணாநிதியின் முகத்தில் கரியை nullசியது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் தெரிவித்தது போலவும், அந்தத் தீர்ப்பையே இன்று மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போலவும் உண்மையைத் திரித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தனது அறிக்கையின் ஆரம்பத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று 20.12.2012 மற்றும் 22.12.2012 ஆகிய தேதிகளில் நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு முன்னரே, அதாவது 17.12.2012 அன்றே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிடச் செய்ய பாரதப் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் கேட்டுக் கொண்டதாகவும்; அதன்படி அவர்களும் பாரதப் பிரதமரைச் சந்தித்து முறையிட்டதாகவும்; பாரதப் பிரதமரும் உரிய முறையில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.
அ.தி.முக. பொறுத்த வரை, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வெளி வந்ததிலிருந்து, தமிழகத்திற்கு பாதகமாக உள்ளவற்றை உச்ச nullநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்; இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பாரதப் பிரதமரை டெல்லியில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன். இது மட்டுமல்லாமல் 17.10.2011 அன்று இது குறித்த ஓர் கடிதத்தை பாரதப் பிரதமருக்கு அனுப்பினேன். மத்திய நீnullர் வள அமைச்சகத்தை இது குறித்து கவனிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்ற நான்கு வரி பதில் மட்டுமே பாரதப் பிரதமரிடம் இருந்து வந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நியாயம் கிடைக்காது என்பதால், இது குறித்து உச்ச nullநீதிமன்றத்தில் 17.4.2012 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இத்தருணத்தில், காவேரி நதிநீnullரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பான வழக்கு உச்ச நீnullதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்ற வினாவினை எழுப்பி, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீnullதிமன்றம் 5.12.2012 அன்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து 7.12.2012 அன்று நடைபெற்ற காவேரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்றும் காவேரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் மத்திய nullநீர் வள அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை உச்ச nullநீதிமன்றம் தனது 10.12.2012 நாளைய ஆணையில் பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு காலம் தாழ்த்துவதால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 20.12.2012 மற்றும் 22.12.2012 தேதியிட்ட கடிதங்கள் மூலம் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதையும், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும் விரைவுபடுத்துமாறு பாரதப் பிரதமருக்கு நான் மீண்டும் கடிதங்கள் எழுதினேன். 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
இதற்கிடையில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால், அ.தி.மு.க. நற்பெயர் ஏற்பட்டு விடுமே என்று அஞ்சி, தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பாரதப் பிரதமரை சந்திக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அவர்களும் பாரதப் பிரதமரை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உண்மையிலேயே வலியுறுத்தினார்களா? அல்லது கேட்பது போல் ஒரு கபட நாடகமாடி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில், தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையிலேயே காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தால் அந்த கோரிக்கை எழுத்துப்nullர்வமானதாக இருந்திருக்க வேண்டும். உண்மையிலேயே எழுத்துப்nullர்வமாக இந்தக் கோரிக்கையை வைத்திருந்தால் அதனை ஊடகங்களுக்கு கருணாநிதி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை வெளியிடவில்லை. இதிலிருந்து, எழுத்துப்nullர்வமாக எந்த ஒரு கோரிக்கை மனுவினையும் கருணாநிதி, தி.மு.க. சார்பில் வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த போது இது குறித்து பாரதப் பிரதமரை சந்திக்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தாத கருணாநிதி, தற்போது பாரதப் பிரதமரை சந்திக்க வலியுறுத்தி அதன் பேரில் அவர்கள் சந்தித்து இருப்பதும்; அதே பிரச்சனை குறித்து அ.தி.மு.க. சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு பல நாட்களாகியும் இது நாள் வரையில் நேரம் ஒதுக்கப்படாததை பார்க்கும் போதும்; 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், இது வரை பின்பற்றாத நடைமுறையாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 10 நிமிடங்கள் தான் பேச வேண்டும் என்றும், இந்த பத்து நிமிடங்களை, விளையாட்டுப் போட்டிகளில் காண்பிக்கப்படுவது போல் இறங்குமுகத்தில் பெரிய திரையில் திரையிட்டு காண்பித்து, 5 நிமிடங்கள் பேசி முடித்த பிறகு ஒரு சிறிய மணி அடிக்கப்படும் என்றும், எட்டு நிமிடங்கள் பேசி முடித்த பிறகு ஆரஞ்சு விளக்கு எரியும் என்றும், பத்து நிமிடங்கள் முடிந்த பிறகு சிகப்பு விளக்கு எரியும் என்றும், பின்னர் மணி அடிக்கப்படும் என்றும் பல நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளதைப் பார்க்கும் போதும்; எதற்கெடுத்தாலும் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுவதையும், அறிக்கை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள கருணாநிதி இந்த விஷயத்தில் எந்தக் கடிதமும் எழுதாமல் வாய்மூடி மவுனியாக இருந்துள்ளதைப் பார்க்கும் போதும்; காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரை சந்தித்து வாய்மொழியாக வலியுறுத்தி சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.
எது எப்படியோ, உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துவதோடு, இந்த விஷயத்தில் கருணாநிதி வாய் திறக்காமல் இருந்தாலே அது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்ச nullநீதிமன்றம் முன்பு அளித்த வாக்குறுதியை மனதில் கொண்டு, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.