முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் கணவர் பெயரை தவறாக பயன்படுத்தி விட்டார் கோயங்கா

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 8 - எனது கணவர் ராஜ் குந்த்ரா பெயரை புக்கி உமேஷ் கோயங்கா தவறாக பயன்படுத்தியுள்ளார். எனது கணவர் அப்பாவி. அவரைக் குற்றவாளி போல மீடியாக்கள் சித்தரிப்பது தவறு என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ஷில்பா ஷெட்டி. இதுகுறித்து ஷில்பா கருத்து தெரிவிக்கையில், 

எனது கணவருக்கு எதிராக மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட்டு வருவது தவறு, கண்டனத்துக்குரியது. அவரைக் குற்றவாளில போல சித்தரிக்கக் கூடாது. எனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை. டெல்லி போலீஸாருக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருகிறார். எனது கணவர் அப்பாவி. அவரது பெயரை உமேஷ் கோயங்கா தவறாகப் பயன்படுத்தியுள்ளார், சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார் ஷில்பா. ஆனால் உமேஷ் கூறியது உண்மைதான் என்று டெல்லி போலீசார் நடத்திய விசாரணையின் போது குந்த்ரா ஒத்துக் கொண்டதாக டெல்லி போலீஸ் கமிஷனரே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்