எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.அக்.1 - தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 40 சதவீத மின்கட்டுப்பாட்டினை, 20 சதவீதமாக குறைக்க முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் முதல்ரூஅமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தில் நிலவும் மின் நிலைமை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் இரா.வைத்திலிங்கம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் கு.ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச்செயலாளர் ஆர்.சண்முகம், உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, வேளாண்மைத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல்ரூஅமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, உயரழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக 14.8.2013 முதல் 30.9.2013 வரை தளர்த்தப்பட்ட நடவடிக்கையை தொழில் அமைப்புகள் பெரிதும் வரவேற்றுள்ளதையும், தென்மேற்கு பருவமழை நன்கு பெய்ததன் காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதையும், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம், தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 1,000 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டங்கள், 1,200 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளதையும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாட்டின் தற்போதுள்ள மின் நிலைமையையும், தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, 1.10.2013 முதல் உச்ச மின் தேவை நேரம் தவிர மற்ற நேரங்களில் உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு 40 விழுக்காடு மின் கட்டுப்பாட்டினை 20 விழுக்காடாக குறைக்க முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உச்ச மின் தேவை நேரங்களில் வீட்டு உபயோகத்திற்கு மின்சாரம் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச மின் தேவை நேரங்களில் உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அவர்கள் தேவையில் 10 விழுக்காட்டிற்கு மிகாமல் பயன்படுத்த தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கை தொழில் வளம் பெருகவும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 17 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 23 hours ago |
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
பாட்டியாலாவில் விபத்து: 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி
18 May 2024பாட்டியாலா : பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
லக்னோ ஆறுதல் வெற்றி
18 May 2024மும்பை : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி ஆறுதல் வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
பார்லி. தேர்தலில் இன்டியா கூட்டணி வெல்லும்: பா.ஜ.க.வின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
18 May 2024சென்னை : மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள
-
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
18 May 2024சென்னை : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை.
-
ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது
18 May 2024புது டெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி.
-
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
18 May 2024திருச்சி : 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பாண்ட்யாவுக்கு தொடரும் சோதனை: 2025 ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை
18 May 2024மும்பை : அடுத்த சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் விளையாட பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இந்திய மசாலாக்களுக்கு தடை விதித்த நேபாளம்
18 May 2024காத்மாண்டு : இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்தக் குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல்: 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது
18 May 2024லக்னோ : பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
-
இதுவே கடைசி போட்டியாக இருக்கலாம்: டோனியுடனான நட்பு குறித்து மனம் திறந்தார் விராட் கோலி
18 May 2024பெங்களூரு : யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம் என்று நேற்று சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடும் முன் பெங்களூரு வீ
-
நாட்டில் 40 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யாமல் இயக்கம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
18 May 2024புதுடெல்லி : நாட்டில் 40 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யாமல் இயக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2024
19 May 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2024
19 May 2024