முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தகுதியற்ற நிறுவனங்களின் பட்டியலை சி.பி.ஐ தயாரிக்கிறது

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 5 - தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசா இருந்த காலத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தகுதியற்ற நிறுவனங்களின் பட்டியலை சி.பி.ஐ. தயாரித்து வருகிறது.  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த விஷயத்தில் அரசியல் கார்பரேட் நிறுவனங்களுக்கான இடைத் தரகராக செயல்பட்டு வந்த நீரா ராடியாவை மீண்டும் ஒரு முறை விசாரிக்கவும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று சி.பி.ஐ  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்