எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - சென்னை மாநகராட்சி 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகளுடன் இணைத்து 200 வார்டுகளாக உயர்த்தியும், 15 மண்டலங்களாக பிரித்தும் நகராட்சி மன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 200 வார்டுகளாக உயர்த்தப்படுவது, 15 மண்டலங்களாக பிரிப்பது ற்றிய தீர்மானம் விவாதிக்கப்பட்டது.
சைதை ரவி (காங்கிரஸ்): பேசுகையில், `தொகுதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்றார். இதற்கு பதில் அளித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பெண்கள் அதிகமாக இருக்கும் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உறுப்பினர்களின் கருத்துக்கு இணங்க தொகுதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பற்றி அரசுக்கு தீர்மானம் அனுப்பப்படும்' என்றார்.
கமிஷனர் கார்த்திகேயன் பேசும் போது, `3ல் ஒரு பங்கு பெண்கள் என்ற விகிதப்படி 67 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகள், இயற்கையான அமைப்புகளை வைத்து ஓரளவு நிர்வாக வசதிக்காக எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படியும் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன' என்றார்.
மேயர் மா.சுப்பிரமணியன்: இது மட்டுமல்லாமல் நிர்வாக வசதிக்காக சென்னை மாநகரத்தை வடக்குப் பகுதி, மத்திய பகுதி, தென்பகுதி என்று 3 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் கூடுதல் கமிஷனர்களை நியமிக்கும் பரிந்துரையை கமிஷனர் அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு மேயர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மங்கள்ராஜ், பிரபு, துரைராஜ் தேவகி உள்பட பலர் வார்டுகள் பிரிக்கப்பட்டதில் குறைகள் இருப்பதாகவும், அவசர அவசரமாக கூட்டத்தை நடத்தியதால் தீர்மானத்தை முழுமையாக படிக்க முடியவில்லை' என்று கூறினார்கள்.
அதற்கு பதில் அளித்த கமிஷனர், `பெரிய அளவில் குறைகள் இருந்தால் கடிதம் மூலம் கொடுங்கள்' சரி செய்யப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
விவாதம் முடிந்ததும் சென்னை மாநகராட்சி 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகளுடன் இணைத்தும், 200 வார்டுகளாக உயர்த்தியும், 15 மண்டலங்களாக பிரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்ற கூட்டம் முடிந்ததும் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏற்கனவே சென்னை 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னையாகவும், 155 வார்டுகள் கொண்ட சென்னையாகவும் இருந்தது. இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் போன்ற மாநகரின் பரப்பளவோடு ஒப்பிடும் போது சிறிய மாநகரமாக இருந்தது. இதை பெரிய மாநகரமாக உருவாக்கி மத்திய அரசின் நிதி உதவிகளை பெறுதல், மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காக மாநகராட்சியின் விரிவாக்க சட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டது. இதன்படி 424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் சென்னை மாநகரம் விரிவுபடுத்தப்படுகிறது.
இதன்படி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சியில் திருவொற்றிர், அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம்புழுதிவாக்கம், மணலி, கத்திவாக்கம், ஆகிய 9 நகராட்சிகள், புழல், போரூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட 8 பேரூராட்சிகள், முகலிவாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், nullலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மடிப்பாக்கம், பாலவாக்கம், கடப்பாக்கம், சடையாங்குப்பம், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், மத்தூர், கதிர்வேடு, புத்தாகரம், சூரப்பட்டு, ராமாபுரம், காரம்பாக்கம், நெற்குன்றம், இடையஞ்சாவடி, நொளம்nullர், மணப்பாக்கம் உள்பட 25 ஊராட்சிகளும் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் அனைத்தும் 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள். தற்போது சென்னையில் 10 மண்டலங்கள் உள்ளன. இனி 15 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அவை திருவொற்றிர் (மண்டலம்1), மணலி (மண்டலம்2), மாதவரம் (மண்டலம்3), தண்டையார்பேட்டை (மண்டலம்4), ராயபுரம் (மண்டலம்5), திரு.வி.க. நகர் (மண்டலம்6), அம்பத்தூர் (மண்டலம்7), அண்ணா நகர் (மண்டலம்8), தேனாம்பேட்டை (மண்டலம்9), கோடம்பாக்கம் (மண்டலம்10), வளசரவாக்கம் (மண்டலம்11), ஆலந்தூர் (மண்டலம்12), அடையாறு (மண்டலம்13), பெருங்குடி (மண்டலம் 14), சோழிங்க நல்லூர் (மண்டலம்15).
மண்டலம்1ல் வார்டு எண்.1 முதல் 14 வரையும், மண்டலம் 2ல் 15 முதல் 21 வரையும், மண்டலம் 3ல் 22 முதல் 33 வரையும், மண்டலம் 4ல் 34 முதல் 48 வரையும், மண்டலம்5ல் 49 முதல் 63 வரையும், மண்டலம்6ல் 64 முதல் 78 வரையும், மண்டலம்7ல் 79 முதல் 93 வரையும், மண்டலம்8ல் 94 முதல் 108 வரையும், மண்டலம்9ல் 109 முதல் 126 வரையும், மண்டலம்10ல் 127 முதல் 142 வரையும், மண்டலம்11ல் 143 முதல் 155 வரையும், மண்டலம் 12ல் 156 முதல் 169 வரையும், மண்டலம் 13ல் 170 முதல் 182 வரையும், மண்டலம் 14ல் 183 முதல் 191 வரையும், மண்டலம் 15ல் 192 முதல் 200 வரையும் வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகரம் முழுவதும் வார்டு வாரியாக வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களுக்காக 1385 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 1385 வாக்குச்சாவடிகளும், பொது வாக்காளர்களுக்கு 2111 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 4881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
116 பொது வார்டுகள், 58 பெண்களுக்கான வார்டுகள், 9 ஆதிதிராவிட பெண்களுக்கான வார்டுகள், 17 ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.
மையிலாப்nullர், ராயபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் ஆண்களுக்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று எதிர்க் கட்சி தலைவர், ஆளுங்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் முறையிட்டனர். எனவே தொகுதி வாரியாக பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்க வேண்டும் என கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.