எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 10 - உர விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நாயக் பவனில் நடைபெற்றது. மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் இரா.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மாநிலத் துணைச் செயலாளர்கள், சி.மகேந்திரன், கோ பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.கோபு, இரா.முத்தரசன், எஸ்.எஸ்.தியாகராஐன், க.சுப்பராயன், வே.துரைமாணிக்கம், த.ஸ்டாலின் குணசேகரன், பி.சேதுராமன், மு.வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: பருவ மழையின் தீவிரத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உயிர் இழப்புக்களும், பலமான பொருள் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன. திருப்nullர் பகுதியில் மிக அதிகமான உயிர் இழப்புக்களும் பொருள் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து இன்னும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பல குடும்பங்களில், குடும்ப உறுப்பினர்களை காணவில்லை என்ற புகார்கள் பரவலாக எழுந்துள்ளன. மாநில அரசு இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உயிரிழப்பு மற்றும் பொருள் சேதாரம் பற்றி முழு விபரத்தையும் வெளியிட வேண்டும். இது இயற்கையின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ற முறையில் மாநில அரசோடு மத்திய அரசும் இழப்பை ஈடுகட்ட தன் பங்கை செலுத்தவேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் இணைந்து நின்று இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்ட ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் 5 லட்சம் ருபாய் வழங்க வேண்டும். கடந்த அக்டோபர் மாதம் முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து வகை உரங்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக காம்ப்ளக்ஸ் உரம் மூட்டை ஒன்றுக்கு ருபாய் 350லிருந்து ருபாய் 750ஆகவும், டீ.ஏ.பி உரம் ருபாய் 485லிருந்து ருபாய் 970ஆகவும் பொட்டாஸ் உரம் மூட்டை ஒன்றுக்கு ருபாய் 230லிருந்து ருபாய் 565ஆகவும் உயர்ந்துள்ளன. உரக் கம்பெனிகளே உரங்களுக்கான விலையை தீர்மானித்துக் கொள்ளலாமென்று மத்திய அரசு அனுமதித்ததால் உரக் கம்பெனிகள் விருப்பத்திற்கேற்ப விலையை உயர்த்தியுள்ளன. இது வண்மையான கண்டனத்துக்குறியது. மேலும் நெல் உள்ளிட்ட தானியங்களுக்கான அரசின் விலை அறிவிப்பு கட்டுபடியாகக் கூடியதாக இல்லை. இந்த நிலையில் உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டுமென்றும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்கள் நலப்பணியாளர்கள் பணிnullநீக்கத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இந்தப்பணி அவசியமல்ல என அரசு கருதுமேயானால், இப்பணியாளர்களை அரசின் இதரத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களில் அவர்களது அனுபவம் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணிகளில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கின்றது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம்னி பேருந்துகள் விருப்பம்போல் கட்டணங்களை உயர்த்தி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து அமைப்புகள் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியிருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் விளைவு இது என்று கூறப்படுகின்றது. இது மத்திய அரசின் கொள்கை என்று கூறியபோதிலும் மத்திய மாநில அரசுகளின் வரியும் ஒரு காரணமாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க வேண்டும். பேருந்துக் கட்டண நிர்ணயிப்பை அரசு தனது கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனங்களிடம் விட்டுவிடுவது சரியல்ல. இதனை மாநில அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.