எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக. 25 – விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 1800 இடங்களில் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் தான் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. புதிதாக சிலைகளை நிறுவுவதற்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நேரில் வந்து புகார் மனு அளித்தனர். அப்போது புதிதாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருவதாகவும் இதனை இந்த ஆண்டு தவிர்க்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தனர்.
சென்னையில் ஒரு சில இடங்களில் இப்போதே விநாயகர் சிலைகளை நிறுவும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி தினமான வருகிற 29–ந்தேதி இந்த சிலைகள் அனைத்துக்கும் பூஜைகள் செய்யப்படும். பின்னர் 1 வாரம் கழித்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
இந்து முன்னணி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ராமகோபாலன் பங்கேற்கும் ஊர்வலத்தில் ஏராளமான சிலைகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். இந்த முறையும் ராமகோபாலன் பங்கேற்கும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தனித் தனியாக நடத்தப்படும். இந்த ஊர்வலம் பாதையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து சென்னை மாநகர போலீசார் கடந்த 1 வாரமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், பெசன்ட்நகர் ஆகிய 3 இடங்களில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும். பட்டினப்பாக்கத்தில் ஏராளமான சிலைகள் கரைக்கப்படுவது உண்டு. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் தினத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 29–ந்தேதியில் இருந்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும் நாள் வரை 1 வார காலத்துக்கு 12 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் விநாயகர் சிலை விழாக் கமிட்டியினர் மற்றும் இந்து அமைப்புகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று (25–ந்தேதி) ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கமிஷனர்கள் ஆபாஷ்குமார், கருணாசாகர் ஆகியோர் இணைந்து இக்கூட்டத்தை நடத்துகிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் கூடுதலான இடங்களில் சிலைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்த உள்ளனர். இது பற்றி போலீசார் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழாக் கமிட்டியினருக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்குகிறார்கள். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் விழாக் கமிட்டியை சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும். சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒலி பெருக்கிகளில் பேசக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலைகளுக்கு அருகில் வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீசாரும் ரோந்து சுற்றி வருவார்கள். நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பின்னர் விழாக் கமிட்டியினர் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் பற்றி போலீசார் விரிவாக அறிவிப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கடந்த ஆண்டு வடசென்னை பகுதியில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதே போன்று இந்த ஆண்டு எந்த வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று துணை கமிஷனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடியே கமிஷனர் ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்க்கும் வகையில் சிறப்பு கேமரா வசதிகளும் செய்யப்பட உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 20 hours ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 17 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 23 hours ago |
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
பாட்டியாலாவில் விபத்து: 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி
18 May 2024பாட்டியாலா : பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1120 கனஅடியாக அதிகரிப்பு
18 May 2024சேலம் : தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்துள்ளது.