முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.27 - காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச்செயலாளர் சி.உதயகுமாரை  அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
கழககத்தின் கொள்கை _ குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச்செயலாளர் சி.உதயகுமார் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்