எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கேபிள்டி.வி. ஆபரேட்டர்களுக்கு எச்.டி செட்டாப் பாக்ஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு எச்.டி உயர்வரையறை செட்டாப் பாக்ஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.இதற்கான விழாவிற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி வரவேற்று பேசினார். விழாவில் செட்டாப் பாக்ஸ்களையும், பல்Nவுறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் கடனுதவிகளை வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதிகளவிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டு களித்திட வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அறிவித்தார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கிட வேண்டும் என்று ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் 17.04.2017 அன்று டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் 26,823 கேபிள் டிவி ஆபரேட்டர்கள்; மூலம் 65,24,116 கேபிள் டிவி சந்தாதாரர்களும் உள்ளனர். அவற்றில் இதுவரை, 16,549 கேபிள் டிவி ஆபரேட்டர்கள்; மூலம் ஏறத்தாழ 30 இலட்சம் எண்ணிக்கையில் எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்களும், 12ஆயிரம் எச்.டி. செட்டாப் பாக்ஸ்களும் கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 420 உள்@ர் கேபிள் டிவி ஆபரேட்டர்களும், 1,00,353 கேபிள் டிவி சந்தாதாரர்களும் உள்ளனர். அவற்றில் முதற்கட்டமாக 79,000 எஸ்.டி. செட்;டாப் பாக்ஸ்கள் வரப்பெற்று இதுவரை 63ஆயிரம் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த செட்டாப் பாக்ஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.125 மற்றும் ஜி.எஸ்.டி.யில் 180 சேனல்களும், ரூ.175 மற்றும் ஜி.எஸ்.டி.யில் 230 சேனல்களும் என இரண்டு தொகுப்புகளாக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செட்டாப்பாக்ஸ்கள் முற்றிலும் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒருமுறை செயலாக்கத் தொகையாக ரூ.200 மட்டும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செட்டாப் பாக்ஸ்கள் மூலம், அரசுக்கு மாதத்திற்கு ரூ.42.43 லட்சம் மதிப்பில் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் தற்போது, மாவட்டத்தில் 2ஆயிரம் எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றுள்ளன. இந்த செட்டாப் பாக்ஸ்கள், எச்.டி ஒளிபரப்பு சேவையை விரும்பும் சந்தாதாரர்களுக்கு ரூ.500-க்கு உள்@ர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இந்த செட்டாப் பாக்ஸ்கள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு தொகுப்பு சேவைகளோடு ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி.யில் 380 எஸ்.டி. சேனல்களுடன், 45 எச்.டி. சேனல்கள் என மொத்தம் 425 சேனல்களை கண்டு களித்திட முடியும்.
பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அதிகளவிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டு களித்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் கீழ், உள்@ர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முறையாக பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் சில பகுதிகளில் செட்டாப் பாக்ஸ்களை வழங்க பொதுமக்களிடமிருந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணம் வசூலிப்பதாக புகார் வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் அருகேயுள்ள ரகுநாதபுரம் பகுதியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முறையாக செயல்படாமல், அரசு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை விநியோகிக்க, அரசு விதிமுறைகளுக்கு எதிராக பணம் வசூலிக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
அதன்பின்பு, அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், மாவட்டத்திலுள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்களையும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் கடனுதவிகளையும் வழங்கினார். இவ்விழாவில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசீலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக்அப்துல்லா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம், ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலாளர்-வட்டாட்சியர் எம்.செய்யது முகம்மது உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 20 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 17 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 23 hours ago |
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
பாட்டியாலாவில் விபத்து: 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி
18 May 2024பாட்டியாலா : பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1120 கனஅடியாக அதிகரிப்பு
18 May 2024சேலம் : தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்துள்ளது.