எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பட்டியலை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 01.01.2019-ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2019 அடிப்படையிலான இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார். அப்போதுஅவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 01.01.2019-ஆம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு கடந்த 01.09.2018 முதல் 31.10.2018 வரையிலான நாட்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளான பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் உள்ள 1367 பாகத்தில் 5,60,173 ஆண் வாக்காளர்களும், 5,62,347 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11,22,589 (பதினொரு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து ஐநூற்று எண்பத்து ஒன்பது மட்டும்) வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்காக 01.09.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 9,670 ஆண் வாக்காளர்கள், 10,542 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 20,218 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 18 முதல் 19 வயது வரையில் 10,785 வாக்காளர்களும், 19 முதல் 29 வயது வரையில் 9,433 வாக்காளர்களும் அடங்குவர். அதேபோல 6,111 ஆண் வாக்காளர்கள், 5,564 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,677 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர். குறிப்பாக இரட்டை பதிவு காரணமாக 1,830 நபர்களும், இடமாற்றம் காரணமாக 3,463 நபர்களும், இறப்பு காரணமாக 6,384 நபர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இன்று (31.01.2019) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 01.09.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட 8,541 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களான ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும சார் ஆட்சியர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் அதாவது வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர் பட்டியல்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும், நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், ஊரகப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ராமநாதபுரம்) வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன், (திருவாடானை) மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், (முதுகுளத்தூர்) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இரா.சிவதாசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தேர்தல் வட்டாட்சியர் முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 20 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்18 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 17 hours ago |
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
பாட்டியாலாவில் விபத்து: 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி
18 May 2024பாட்டியாலா : பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.