எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.24 - கேரள சுற்றுலா துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுப்பயணிகளின் வருகை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கேரள சுற்றுலாதுறையின் வருவாய் கடந்த ஆண்டை விட ரூபாய் 2000 கோடி அதிகரித்துள்ளது. சென்னையில் கேரள சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இந்த விழாவில் அளிக்கப்பட்ட விபரங்கள் வருமாறு:- கேரள மாநிலத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.5 லட்சமாக அதிகரித்துள்ளது. முந்தைய 2010 ஆண்டில் இது 6.5 லட்சமாக இருந்தது முந்தைய ஆண்டில் 85.95 லட்சமாக இருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து இந்த ஆண்டு 93 லட்சமாக அதிகரித்துள்ளது. 2010 ம் ஆண்டில் ரூ.3797.37 கோடியாக இருந்த அன்னியச் செலாவணி வருவாயும் ரூ.4221 கோடியாக உயர்ந்துள்ளது. இதே போல் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் நேரடி மற்றும் மறைமுக வருவாய் முந்தைய ஆண்டில் இருந்த ரூ.17348 கோடியிலிருந்து ரூ.19037 கோடியாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாவின் அனைத்தும் அம்சங்களுடனும் உலக வரைபடத்தில் தனக்கென ஒரு இடத்தை கேரள மாநிலம் கடந்த ஆண்டில் உருவாக்கிக் கொண்டது. இது இந்த ஆண்டிலும் தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது டிஜிட்டல் புரட்சியின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கேரளா தன்னை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிறப்பாக முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது.சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சொத்து உரிமையாளர்கள், பயண முகமைகள் மற்றும் கூகுல் போன்ற தேடியந்திரங்கள் மற்றும் வைஃபை, மொபைல் இன்டெர்னெட் போன்றவற்றின் இணைப்பும் கேரளாவின் மீது வெளிநாடுகளில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா டூரிசம் மேற்கொண்ட இன்னொரு யுக்திசார்ந்த முயற்சியாக லண்டனில் அதிக மக்கள் கூடும் காட்சி கேலரியில் யுவர் மொமெண்ட் இஸ் வெய்ட்டிங் என்ற வீடியோ விளம்பரம் அறிமுகப்படுத்தப்பட்டது. யூட்யூப் தளத்திலும் இதர ஊடகங்களில் இந்த வீடியோ பெற்றிருக்கும் பெரும்புகழ் இந்த முயற்சிக்கு கிடைத்திருக்கும் பெரும் வெற்றியைக்குறிப்பாக அமைந்துள்ளது. ஏழாம் ஆண்டு கேரளா டிராவல் மார்ட், கேடிஎம் 2012 என்ற கண்காட்சி, செப்டம்பர் 27, 2012 முதல் செப்டம்பர் 30,2012 வரை கொச்சியில் உள்ள லி மெரிடியன் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படுகிறது கேரளாவில் சுற்றுலா திட்டங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் அனைத்தும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒன்றாகக் கொண்டு வருவதற்கான ஒரே சுற்றுலா தொடர்பான நிகழ்வாக இது திகழ்கிறது. வாங்குவோர் விற்போர் ஊடகம் அரசு முகமைகள் மற்றும் இதர தரப்பினரை ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட ஒரே நிகழ்வாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. விசாகப்பட்டினம், புவனேஸ்வர், லக்னோ, குவாலியர், மைசூர், கோயம்புத்தூர், வதோதரா, புனே, ராய்ப்nullர் மற்றும் இன்தூர் ஆகிய இடங்களில் வெற்றிகரமான பங்குதாரர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் உற்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக முதல் அடுக்கு நகரங்களான சென்னை, பெங்களூர், தில்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத், சண்டிகர், நாக்nullர், கோவா, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய சந்திப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன. இதுவரை நடத்தப்படாத புதிய நகரங்களிலும் இத்தகைய சந்திப்புகளை நடத்த கேரளா டூரிசம் திட்டமிட்டுள்ளது. அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பர்ன், நார்வேயில் ஆஸ்லோ, டென்மார்க்கில் கோபன்ஹேகன், ஃபின்லாந்தில் ஹெல்சின்கி, ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம், ஃபிரான்ஸ்சில் மெர்சிலி, ஜெர்மனியில் பெர்லின் ஆகிய இடங்களில் பயிலரங்கங்களை நடத்தியுள்ளது. பாரிசில் நடைப்பெற்ற டாப்ரெசா லண்டனில் நடைபெற்ற டபிள்யுடிஎம் ஸ்பெயிலின் நடத்த ஃபிடுர் சர்வதேச கண்காட்சியில் ஆகியவற்றில் பங்கேற்றதுடன் பெர்லினில் நடைபெறும் ஐடிபி மற்றும் ஸ்வீடனில் கோதென்பர்க்கில் நடைபெறும் டியூர் ஆகிய சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளது.
கேரளாவில் நடைபெற்ற கிராண்ட் கேரளா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் திருவிழா, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் தொடர்ந்து ஐந்து முறை பெரும் வெற்றி பெற்றுள்ளது. கேரள அரசு மேற்கொண்ட இந்த முயற்சி கடந்த 2007 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது பெரும் எதிர்ப்பார்ப்பை ஆண்டுதோறும் ஏற்படுத்தும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கேரளாவின் தொழில் மற்றும் வர்த்தக துறை நிதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவுடன் கேரளாவின் சுற்றுலாத்துறை நடத்தும் இந்த நிகழ்ச்சி , கேரளாவை சர்வதேச ஷாப்பிங் தொகுப்பாக மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. புதிய நிறுவனங்கள் ஆச்சரியமூட்டும் சலுகைகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இந்த ஷாப்பிங் திருவிழாவை பெரும் வெற்றி பெறச் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.