எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர், ஏப்.28 - கடத்திச்செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க வேண்டும் என்றால் சிறையில் உள்ள தங்களது மேலும் 9 தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால் கலெக்டரை மீட்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக உள்ளவர் அலெக்ஸ்பால் மேனன். இவர் கடந்த 20 ம் தேதி அரசு விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த சம்பவத்தின்போது மாவட்ட கலெக்டரின் 2 மெய்க்காவலர்கள் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அலெக்ஸ் பால் மேனன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மமோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். பால் மேனனை மீட்க சத்தீஷ்கர் முதல்வர் ராமன்சிங்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவோயிஸ்ட்டு தீவிரவாத குழுக்களின் தலைவர்களுடன் சத்தீஷ்கர் மாநில அரசு தூதர்கள் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சிறையில் உள்ள 8தீவிரவாதிகளை விடுதலை செய்தால்தான் கலெக்டரை விடுதலை செய்வோம் என்று மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. அப்போது சிறையில் உள்ள மேலும் 9 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் புதிய நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அலெக்ஸ் பால் மேனனை விடுவிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்டுகளின் இந்த புதிய நிபந்தனைகளையும் சேர்த்து பார்க்கும்போது மொத்தம் 17 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று சத்தீஷ்கர் மாநில நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராம்நிவாஸ் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினரை தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும், பசுமை வேட்டை என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று ராம்நிவாஸ் தெரிவித்தார். பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இதேபோல நக்ஸல் ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கோரிக்கையை அடுக்கிக்கொண்டே போகின்றனர் என்று அந்த போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சத்தீஷ்கர் அரசு சார்பில் முன்னாள் தலைமை செயலாளர் நிர்மலா புச் தூதுவராக பங்கேற்றார். மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் பி.டி.சர்மா, பேராசிரியர் ஜி.ஹர்கோபால் ஆகியோர் பங்கேற்றனர். டட்மெல்டா என்ற அடர்ந்த வனப்பகுதியில் தற்போது அலெக்ஸ்பால் மேனன் மாவோயிஸ்ட்டுகளால் சிறை வைக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகளின் புதிய கோரிக்கையால் மாவட்ட கலெக்டரை மீட்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் விடுதலை செய்யக்கோரும் 17 தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களை விடுதலை செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. இருந்தாலும் இந்த கோரிக்கையை தங்களது அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் ராமன்சிங் கூறியுள்ளார்.
நேற்றுமுன்தினம் இருதரப்பு தூதர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநில அமைச்சரவையின் துணைக்குழு கூட்டத்தை கூட்டி அலெக்ஸ்பால் மேனன் விவகாரம் குறித்து ராமன்சிங் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டரை மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை மாவோயிஸ்ட்டுகள் நிராகரித்துவிட்டனர். இப்போது மேலும் பல புதிய நிபந்தனைகளையும் அவர்கள் விதித்துவருகின்றனர். இதனால் மாவட்ட கலெக்டரை மீட்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர் கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு : தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
19 May 2024சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண
-
பாராளுமன்ற தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : தேர்தலில் பணிகளில் ஆணையம் மும்மூரம்
19 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2024
19 May 2024 -
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
19 May 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் கடலில் பக்தர்கள் புனித நீரா
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.