முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது, இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்ப்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து நாளையும் வரும் 18-ம் தேதியும் ரெட்டியார்ப்பட்டி நாராயணனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து